அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, September 25, 2010

"9/11 தாக்குதலுக்கு காரணம் அமெரிக்க அரசுதான்" ஈரான் அதிபர் ஐ.நா.சபையில் பரபரப்பு பேச்சு.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 192 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட பிரம்மாண்டமான ஐ.நா.சபை கூட்டம் நடந்தது. இதில், ஈரான் அதிபர் அஹ்மது நிஜாதும் கலந்துக் கொண்டு பேசினார். அவரின் பேச்சு கூட்டத்தில் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.



அவர் பேசியதாவது: "கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் மற்றும் பென்டகன் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு காரணம் அல்- கொய்தா அமைப்பினரின் தற்கொலை படையினர் தான் என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.

ஆனால், இந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்க அரசு தான் உள்ளது என பெரும்பாலான மக்களும், அரசியல்வாதிகளும், உலக நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. மேலும் நலிந்து வரும் அமெரிக்காவின் பொருளாதாரத்தை நிலை நிறுத்தவும், மேற்கு ஆசியாவில் தனது அதிகாரத்தை நிலை நிறுத்தவும் நடந்த ஏற்பாடு தான் இது" என்று இவ்வாரு அவர் பேசினார்.

இதை தொடர்ந்து, ஈரான் அதிபர் அஹ்மது நிஜாதின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டத்தில் இருந்து அமெரிக்க, கனடா மற்றும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த 27 நாட்டு பிரதிநிதிகள் மட்டும் வெளிநடப்பு செய்தனர். மேலும், ஈரான் அதிபரின் இந்த பேச்சுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா தனது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஈரான் அதிபரின் இந்த பேச்சுக்கு 192 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஐ.நா.சபை கூட்டத்தில் மிகவும் குறைவானவர்கள் மத்தியில் மட்டுமே எதிர்ப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

No comments: