அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, September 23, 2010

எருது சிங்கம் பாடத்திலே...

unityy.jpg



அஸ்ஸலாமு அலைக்கும்,

ஏகத்துவத்தை எத்திவைக்க

ஏறாத படிகள் இல்லை

வாங்காத அடிகளில்லை!

ஒடஒட விரட்டும் போது

ஒன்றாய்தானே ஒடினோம்;

மறைந்துக்கொள்ள இடம் கண்டு

முதல் உரிமை

உனக்குண்டு என்றோம்!

துவண்டப் போது

தோள்கொடுத்தோம்;

கலங்கும் போது

கரம் கொடுத்தோம்;

ஒன்றாய் இருந்த நாமோ

உடைத்துவிட்டுச் சென்றோம்;

இயக்கத்தை கலைத்துவிட்டுச் சென்றோம்!

அதுவரை

முகர்ந்துக்கொண்ட நாமோ

முகத்தைத் திருப்பிக்கொண்டோம்!

ஒருவரை ஒருவர் வெறுத்துக்கொண்டோம்!

காரசாரமாய் மேடையில்

ஏறினோம் – சகோதரத்துவத்தை

பாடையில் ஏற்றினோம்;

வீணான பேச்சாலே

ஈமானை மறந்தோம்;

காரமாகப் பேசுவது

வீரமாக நினைத்திருந்தோம்;

வெற்றிக்களிப்பில் தனித்திருந்தோம்!

ஏங்காத நாளில்லை

ஏன் இந்த அவல நிலை;

எருது சிங்கம் பாடத்திலே

எருது வீழ்ச்சியை படித்தோமே;

பள்ளிக்கதையை மறந்தோமே!

பொதுவான எதிரிக்கு

ஒன்றுப்பட்டு நிற்போம்;

நின்றுக்காட்டி ஜெயிப்போம்!

இரத்தவெறிக் கொண்ட

காலமிது;

இரத்த உறவே சேர்ந்துவிடு!

நமக்கு

ஆறாத ரணமுண்டு

தீராதப் பகையுண்டு;

களம் காணுவோம்

ஒன்றாய்

பிரிந்திருக்க வேண்டாம்

இரண்டாய்!

No comments: