அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, March 2, 2011

ஏப்ரல் 13ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் ; இன்று முதல் தேர்தல் நடைமுறை அமல்

புதுடில்லி: வரும் ஏப்ரல் 13ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என டில்லியில் தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு மார்ச் 19ம் தேதி வெளியிடப்படும். புதுச்சேரியிலும் இதே நாளில் தேர்தல் நடைபெறும்.

கேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 13ம் தேதியும் அசாமில் 2கட்டமாக ஏப்ரல் 4 மற்றும் 11ம் தேதிகளிலும் மேற்கு வங்கத்தில் 6 கட்டமாகவும் தேர்தல் நடைபெறும். மேற்கு வங்கத்தில் ஏப்ரல்18,ஏப்ரல் 23, ஏப்ரல் 27 மற்றும் மே 3 , மே 7 மே 10 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் சட்டசபை தேர்தலை சந்திக்கிறது.

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19ம் தேதி துவங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26ம் தேதி. வேட்பு மனுக்கள் மீதான பரீசிலனை மார்ச் 28ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 30ம் தேதியுடன் முடிகிறது.

தேர்தல் நடக்கும் அனைத்து மாநிலங்களிலும் பதிவாகும் ஓட்டுக்கள் மே 13ம் தேதி எண்ணப்படுகின்றன.

இத்தேர்தலுக்கான தேதி விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்திற்கான சட்டசபை காலம் மே 16 ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இங்கு தேர்தல் நடத்துவதற்கான வாக்காளர் பட்டியல், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் மின்னனு இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து முன்ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் பணி தொடர்பாக தேர்தல் கமிஷன் பல முறை ஆய்வு கூட்டங்களை நடத்தி ஏற்பாடுகள் முடிந்து ஓட்டுப்பதிவுக்கு தயாராக இருப்பதாக தமிழக தேர்தல் கமிஷன் அறிவித்தது.

இந்நிலையில் டில்லியில் தலைமை தேர்தல் கமிஷன் குரேஷி தலைமையில் இன்று தேர்தல் நடத்தும் நாள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் தேர்தல் கமிஷனர் குரேஷி தேர்தல் நடக்கும் நாள் விவரத்தை அறிவித்தார். இதன்படி தமிழகத்தில் வரும் ஏப்ரல் 13ம்தேதி தேர்தல் நடக்கிறது

No comments: