அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, March 2, 2011

லிபியாவிலிருந்து 98 மலேசியர்கள் தாய்மண் வந்தடைந்தனர் -உற்சாக வரவேற்பு

லிபியாவிலிருந்து 98 மலேசியர்கள் தாய்மண் வந்தடைந்தனர் -உற்சாக வரவேற்புலிபியாவிலிருந்து வெளியேறிய 98 மலேசியர்கள் திங்கட்கிழமை காலை 6.50 க்கு தாய் மண்ணுக்கு வந்து சேர்ந்தனர்.
இத்தாலியிலிருந்து எம்.ஏ.எஸ் வாடகை விமானத்தில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்த அவர்களை வெளியுறவு துணையமைச்சர்,டத்தோ ரிச்சர்ட் ராயட் வரவேற்றார்.

விமான நிலையத்தில் அவர்களின் வருகைக்காகக் காத்திருந்த உறவினர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
லிபிய அதிபர் கடாபி பதவி விலக வேண்டும் என்ற பொதுமக்களின் வற்புறுத்தலைத் தொடர்ந்து கடந்த வாரம் முதல் லிபியாவில் கலவரம் உச்ச கட்டத்தில் உள்ளது.இதன் காரண்மாக அங்கு வசிக்கும் 130 மலேசியர்களை நாட்டுக்குத் திரும்ப கொண்டு வருவதில் அரசாங்கம் முனைப்பு காட்டி வருகிறது.எஞ்சியுள்ள 32 பேரும் புதன்கிழமை மலேசியா வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே லிபியாவிலுள்ள மூன்று மலேசியர்கள் தங்கி இருக்கும் இடத்தை அடையாளம் காண முடியவில்லை என்று வெளியுறவு துணையமைச்சர் டத்தோ ரிச்சட் ராயட் கூறுகிறார்.காரணம் அவர்கள் அந்நாட்டுக்கு சென்றதற்கான பதிவுகளை வெளியுறவு அமைச்சு கொண்டிருக்கவில்லை

No comments: