அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, March 28, 2011

மதுரை "மாட்டின் தலை" ஒரு சதித்திட்டம்!!

மதுரை: மதுரையில் எஸ்.எஸ் காலனியிலுள்ள ஆர்.எஸ்.எஸ்ஸின் அலுவலக வளாகத்தில் மாட்டின் தலையை கண்டெடுத்த சம்பவம் கலவரத்தை உருவாக்குவதற்கான தீவிரவாத சங்க்பரிவாரின் சதித்திட்டம் என சந்தேகிப்பதாக உண்மைக் கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.

DSC00220.JPG


இச்சம்பவத்தைக் குறித்து க்ரைம் ப்ராஞ்ச் விசாரணை நடத்த வேண்டுமென நேசனல் கான்ஃபெடரேசன் ஆஃப் ஹியூமன் ரைட்ஸ் ஆர்கனைசேசன் (என்.சி.ஹெச்.ஆர்.ஓ) வலியுறுத்தியுள்ளது.

இம்மாதம் ஒன்றாம்தேதி ப்ளாஸ்டிக் பையில் பொதியப்பட்ட நிலையில் மாட்டின் அறுத்தெடுக்கப்பட்ட தலை ஆர்.எஸ்.எஸ் அலுவலக வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் 5 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்திருந்தது.

இவர்கள் வாக்குமூலம் அளித்ததன் அடிப்படையில் அருகிலுள்ள ஆற்றங்கரையிலிருந்து மாட்டின் தோலும், கத்தியும், பயன்படுத்திய வாகனமும் கண்டெடுத்ததாக போலீஸ் கூறியிருந்தது.

ஆனால், தங்கள் மீது பொய் குற்றம் சுமத்தி கலவரத்தை உருவாக்க திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ்ஸின் சதிவேலைக்கு போலீஸ் துணை போவதாக முஸ்லிம்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மனித உரிமை ஆர்வலரும், பிரபல எழுத்தாளருமான அ.மார்க்ஸ், பீப்பிள் யூனியன் ஃபார் ஹியூமன் ரைட்ஸின் ரஜனி, ஃபெடரேசன் ஃபார் பீப்பிள்ஸ் ரைட்ஸ் செயலாளர் ஜி.சுகுமாரன், வழக்கறிஞர்களான முஹம்மது அப்பாஸ், பாதுஷா(என்.சி.ஹெச்.ஆர்.ஒ) ஆகியோர் உண்மைக் கண்டறியும் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

இக்குழு ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள், ஜமாஅத் நிர்வாகிகள், மூத்த போலீஸ் அதிகாரிகள், கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் ஆகியோரை சந்தித்தனர். கைது செய்யப்பட்டவர்களை போலீஸ் சித்திரவதைச் செய்ததாகவும், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டுள்ளதாகவும் உண்மைக் கண்டறியும் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இச்சம்பவம் ஹிந்து தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் சதித் திட்டமாக இருக்கலாம். ஏனெனில் தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்ஸின் கடந்த கால அனுபவங்கள் இதனை நிரூபிக்கின்றன என என்.சி.ஹெச்.ஆர்.ஓ குற்றஞ்சாட்டியுள்ளது.

No comments: