அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, May 5, 2011

ஹெலிகாப்டரில் சென்ற சிரஞ்சீவி உயிர் தப்பினார்!


மேற்கு வங்க மாநிலத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் சென்ற நடிகர் சிரஞ்சீவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கரக்பூரில் வசிக்கும் தெலுங்கு மக்களிடையே பிரச்சாரம் செய்வதற்காக நடிகர் சிரஞ்சீவி ஹெலிகாப்டர் மூலம் சென்றார்.

புரூலியாவில் இருந்து கரக்பூருக்கு செல்லவிருந்த அந்த ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. வானிலை மோசம் அடைந்ததால் ஹெலிகாப்டர் மேலே பறக்க முடியாமல் திணறியது.

சில நிமிடங்கள் வானத்திலேயே வட்டமடித்துக் கொண்டிருந்தது. ஹெலிகாப்டரின் எரிபொருள் குறைந்து கொண்டிருக்க முன்னேறிச் செல்வதில் தடங்கல் ஏற்பட்டதால் விமானி, ஹெலிகாப்டரை கொல்கத்தாவுக்குத் திருப்பி அவசர அவசரமாகத் தரையிறக்கினார்.

பின்னர் ஹெலிகாப்டர் பயணத்தை ரத்து செய்துவிட்டு கரக்பூருக்கு கார் மூலம் பயணமானார் நடிகர் சிரஞ்சீவி

No comments: