அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, May 5, 2011

ஆ.ராசா இருக்கும் சிறையில் சுரேஷ் கல்மாடி.


காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்த முறைகேடுகள் வழக்கில் கைதாகியுள்ள காமன்வெல்த் முன்னாள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் சுரேஷ் கல்மாடிக்கு சிபிஐ காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து திஹார் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.



முன்னாள் அமைச்சர் ராசா உள்ளிட்ட விஐபிக்கள் தற்போது அடைக்கப்பட்டுள்ள திஹார் சிறையில் கல்மாடியும் அடைக்கப்படுகிறார். அங்கு 14 நாள் சிறைக் காவலில் வைக்க டெல்லி சிபிஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கல்மாடி உள்ளிட்ட 3 பேர் நீதிபதி தர்மேஷ் சர்மா முன்னிலையி்ல ஆஜர்படுத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து மே 18ம் தேதி வரை அனைவரையும் சிறையில் அடைக்க நீதிபதி சர்மா உத்தரவிட்டார்

No comments: