
மருத்துவத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: நோயாளிகளுக்கு கூடுதல் வ சதி களுடன் புதிய காப்பீடு திட்டம் கொண்டு வர வேண்டும் என்பதில் அரசு தீவிர கவனம் செலுத்து கிறது. முதல்கட்டமாக 100 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த திட்டத்தில் பயன் பெற்றவர்கள் விவரம்; எந்தெந்த மருத்துவமனை டெண்டர் பெற்றது; எவ்வளவு பணம் காப்பீடாக மக்களுக்கு வழங்கப்பட்டது; சிகிச்சையின் தரம் எப்படி இருந்தது உள்ளிட்ட விவரங் கள் அந்தந்த மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனரிடம் கேட்கப்பட்டுள்ளது. இவ்விவரத்தை அளித்த பின், முதல்கட்டமாக 20 டாக்டர்கள், 30 பணியாளர்கள் நியமிக்கப்படுவர். இவர்கள் அறிவுரைக்கேற்ப, தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை மேற்கொள்ள முடியும். நோயாளிகளின் மருத்துவ ஆவணங்களை சரிபார்ப்பது; காப்பீடு தொகையை எளிதில் பெற உதவுவது உள்ளிட்ட பணிகளிலும் இப்பணியாளர்கள் ஈடுபடுவர். இப்போதைக்கு 618 மருத்துவமனைகளின் பெயர்களுடன் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் அக்., மாதம் உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது, என்றார்.
No comments:
Post a Comment