அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, February 9, 2009

அபூதாவூதில் வரும் அந்த ஹதீஸின் விளக்கம் என்ன?

கண்பார்வையற்ற ஒரு மனிதரின் (தாய்மையடைந்த) அடிமைப்பெண், நபி (ஸல்) அவர்களை கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டும் நிந்தனைகள் பல செய்து கொண்டும் இருந்தாள். அம்மனிதர் பலமுறை மன்னித்தும் நபி (ஸல்) அவர்களை திட்டுவதை அவள் நிறுத்த இல்லை. அவர் பலமுறை அவளை எச்சரித்தும் அவள் திருந்தவில்லை. ஒரு நாள் இரவு அவள் நபிகளாரை அசிங்கமாகத் திட்டித்தீர்த்தாள், நபிகளை வசைமாறி பொழிந்தாள். எனவே கண்தெரியாத அந்த நபர் ஒரு ரம்பத்தை எடுத்து அவளின் வயிற்றில் குத்திவிட்டார். இதனால் அவளும் அவள் வயிற்றிலிருந்த குழந்தையும் இறந்துவிட்டது. மறுநாள் காலை இச்சம்பவம் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் மக்கள் அவையை கூட்டினார்கள் பிறகு மக்களை நோக்கி கேட்டார்கள். மக்களே உங்களை பரிவுடன் கேட்கிறேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களில் யார் இந்த காரியத்தை செய்தது ? மேலும் அவர் இவ்வவையில் இருப்பின் எழுந்து நிற்கவேண்டுமென்று அவர்மீது எனக்குள்ள உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன் என்றார்கள். பின்னர் மக்களிடமிருந்து ஒருவர் எழுந்து நின்றார்.

பிறகு அந்த நபர் நபி(ஸல்) அவர்களுக்கு முன் அமர்ந்தார். அல்லாஹ்வின் தூதரே! நான்தான் அவளின் உரிமையாளன். அவள் கேவலமான வார்த்தைகளால் உங்களை திட்டுவதும், தொடர்ந்து நிந்தனை செய்வதுமாக இருந்தாள். நான் அவளை பலமுறை மன்னித்தேன். இருப்பினும் அவள் உங்களை இகழ்வதை நிறுத்துவதாக இல்லை. அவளை பல முறை நான் எச்சரித்தும் தன் நிலையை மாற்றிக் கொள்வதாக அவள் இல்லை. அவளிடமிருந்து முத்துக்களைப் போன்ற இரு மகன்களைப் நான் பெற்றிருக்கின்றேன். அவள் என்னுடைய மனைவி. கடந்த இரவு அவள் உங்களைக் கேவலமாகத் திட்டிக் கொண்டும் வசைமாறிப் பொழிந்து கொண்டுமிருந்தாள். எனவே கோபத்தில் ஒரு ரம்பத்தை எடுத்து அவள் வயிற்றில் குத்திவிட்டேன்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : சாட்சியாளர்களாக அமர்ந்திருப்போரே ! அவளின் இரத்தத்திற்கு பலி எடுக்கப்படாது. அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி).

மேற்கானும் இந்த அறிவிப்பு அபூதாவூதில் கிதாபுல் ஹூதூத் என்ற பாடத்தில், இஸ்லாமிய அரசின் கீழ் உள்ள குடிமக்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டு மென்பதை விளக்கும் ஹதீஸ்களின் வரிசையில் 4357வது ஹதீஸாகவும், நஸயியில் 4054 வது அறிவிப்பாகவும், அபுதாவூதின் ஆங்கில பதிப்புகளில் 4348 வது ஹதீஸாகவும் அது பதிவுசெய்யப்பட்டுள்ளது. அக்காலத்தில் ஒரு அடிமையின் மீது அவருடைய எஜமானர் முழு உரிமையும் உடையவராவார். இருப்பினும் அவ்வடிமைப்பெண் 'உம்முவலத்' என்ற நிலைக்கு வந்துவிட்டாள் என்று இந்த ஹதீஸ் குறிப்பிடுகிறது. அதாவது அன்றைய விதிகளின் படி ஒரு அடிமையாக இருப்பவள் பிள்ளை பெற்றுவிட்டாள், அவனுடைய பொருப்பாளர் (அல்லது கணவன்) அவளை பிறருக்கு விற்கமுடியாது. கணவன் இறந்துவிட்டால் அவள் அடிமை நிலையிலிருந்து தானாகவே விடுபட்டுவிடுவாள். இனி அவள் யாருக்கும் அடிமையில்லை என்பதாகும். மேலும் சாட்சியாளர்களாக அமர்ந்திருப்போரே ! அவளின் இரத்தத்திற்கு பலி எடுக்கப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் தன்னைத் திட்டியதற்காக கற்பினிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து கொலை செய் என்று அவர்கள் கட்டளையிட்டதாக பொய்யாக திரித்துள்ளனர்.

இதை விளங்குவதற்கு முன்னால் இந்த ஹதீஸை ஒரு முறை படித்தாலே பளிச்சென்று உண்மை விளங்கிவிடும். அது நபி (ஸல்) அவர்கள் கண்தெரியாத நபருக்கு அவருடைய மனைவியை கொலை செய்யுமாறு சொல்லவுமில்லை, எவருக்கும் அவ்வாறு கட்டளையும் இடவில்லை. அப்படி கட்டளையிட்டு இருந்தால் மறுநாள் காலை சபையைக் கூட்டி அவளை கொலை செய்தது யார் என்று வினவியிருக்க மாட்டார்கள், அப்படி விசாரித்திருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த ஹதீஸிலிருந்தே முஹம்மதைத் திட்டினால் கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் வயிற்றில் குத்தி கொன்று விட்டு வா. உன் மீது எந்த குற்றமும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று நபிகளார் சொன்னதாக நரேந்திர மோடி பாணியில் இவர்கள் புழுகியிருப்பதின் உண்மைநிலை விளங்கிவிட்டது. இப்பொய்யர்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிட்டது.

ஒருவன் ஒரு நாட்டின் குடிமகனாக இருப்பதாக இருந்தால் அந்த நாட்டின் சட்டத்திற்கு அவன் கட்டுப்பட்டவனாக இருக்க வேண்டும். சட்டத்தை அவன் மீறும்போது அரசு அவனுக்கு தண்டனை அளிக்கத்தான் செய்யும். உதாரணமாக நம் நாட்டின் ஜனாதிபதியை ஒருவன் வரம்பை மீறி சதாகாலமும் திட்டிக் கொண்டே இருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவன் அப்படி திட்டிக் கொண்டிருப்பதில் எள்ளளவும் உண்மையோ நியாயமோ இல்லை என்றும் வைத்துக் கொள்ளுங்கள். அவனுக்கு நம் அரசாங்கம் மாலை போட்டு மாவீரன் பட்டம் சூட்டுமா?. அவனை தண்டிக்கத்தானே செய்யும். அப்படி தண்டிப்பது பிறருக்கும் ஒரு பாடமாக அமையும். அப்படி தண்டிப்பதுதான் அறிவுப்பூர்வமானதும்கூட. காரணம் ஒரு நாட்டின் தலைவர் மானபங்கப்படுத்தப்படும் போது அந்நாட்டுஅரசு கையைக் கட்டிக்கொண்டிருந்தால், பிறகு இது புற்றுநோயாகப் பரவி அந்த நாட்டிற்கே கேடுவிளைவிக்கும், நாட்டின் கட்டமைப்பு சீர்குலையும் மேலும் அந்த அரசாங்கம் இயங்காமல் போகும். அரசாங்கம் தண்டிப்பது ஒருபக்கம் இருக்கட்டும், இன்றைய சூழலில் அவரது கட்சிக்காரர்களே தண்டித்துவிடுவர், இதுதான் எதார்த்த நிலை.

அபூதாவூதில் 4357 வது ஹதீஸாக வந்துள்ள மேற்கண்ட சம்பவம், அடிமை முறையை இஸ்லாம் அறுத்தெரிவதற்கு முன்னால் நடந்ததாகும். கண்தெரியாத அந்த மனிதர் அவளை அடிமையாக வைத்திருந்தார். அவர் கோபம் கொண்டு அவளை கொலை செய்யும் அளவிற்கு அவள் நடந்து கொண்டிருக்கிறாள் என்பது தெளிவாகிறது. அப்பெண் நபி (ஸல்) அவர்களை தன் வாழ்நாள் முழுவதும் திட்டித் தீர்த்துக் கொண்டே இருந்திருக்கிறாள் என்பதும் இந்த ஹதீஸிலிருந்து தெரிய வருகிறது.

நபி (ஸல்) அவர்கள் வெறும் ஆன்மீகத்தலைவராக மட்டும் இல்லாமல் மாபெரும் ஆட்சித்தலைவராகவும் திகழ்ந்தார்கள். மனிதர்களுக்கு நேர்வழிகாட்டுவதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட இறைதூதரை இகழ்வது இறைவனின் வழிகாட்டுதலை, அவனது வல்லமையை, இகழ்வதில் கொண்டு சேர்க்கும். இது இறைவனுக்கு கடும் கோபத்தை விளைவிக்கக் கூடியதாகும். நபி (ஸல்) அவர்களை திட்டிக்கொண்டிருப்பது அவர்களின் நபித்துவத்தில் களங்கத்தை ஏற்படுத்தும். இஸ்லாமிய நம்பிக்கைப்படி முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று ஒவ்வொரு முஸ்லிமும் நம்பியிருக்கிறார்கள், நம்பவேண்டும். ஒரு முஸ்லிம் இவ்வாறு திட்டினால் அவரின் இறைநம்பிக்கை முறிந்துவிடும் (ரித்தத் ஏற்படும்). இஸ்லாமிய ஆட்சி இருந்தால் அவரை மன்னிக்காது மாறாக அவருக்கு தண்டணை வழங்கப்படும்.

நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் நிராகரிப்பை அதிகரித்துக் கொண்டனரோ, அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை. மேலும் அவர்களுக்கு (நேர்) வழியைக் காட்டுகிறவனாகவும் இல்லை. (அல்குர்ஆன் 4:137)

நபி (ஸல்) அவர்கள் மட்டுமல்லாது சங்கைமிக்க பிற நபிமார்களான நோவா, ஆப்ரஹாம், இஸ்மவேல், மோஸஸ், ஏசு (இவர்கள் அனைவர்மீதும் அல்லாஹ்வின் சாந்தி நிலவட்டுமாக)போன்ற பிற தீர்க்கதரிசிகளை இகழ்வதும் இஸ்லாமிய சட்டத்தின் படி தண்டனைக்குரியதே. அவ்வளவு ஏன், தற்போது இணையத்தின் வாயிலாக வன்முறையைத்தூண்டும் மேற்படியாளர்களைகூட எவரும் அவசியமில்லாமல் திட்டினால் திட்டியவருக்கு தண்டணைதான். இஸ்லாமிய ஆட்சி நடக்கும்போது ஒருவரை மற்றொருவர் தவறுதலாகத் திட்டிவிட்டால் திட்டப்பட்டவர் மன்னிக்காததுவரை திட்டியவருக்கு தண்டனையே வழங்கப்படும். தேவையில்லாமல் பிறரைத் திட்டி அவரின் மனதைப் புண்படுத்துவதை ஒரு சாதாரண பாவமாக இஸ்லாம் கருதவில்லை. இதற்கு சிறந்த உதாரணமாக, நாளை மறுமையில் நன்மைகள் பல செய்து சுவனம் புகும் தருவாயில் ஒருவர் இருப்பார். அவரால் அநியாயம் செய்யப்பட்டவர்கள் இறைவனிடம் முறையிடுவர். அவ்வாறு முறையிடுபவர்களுக்கு சுவனம்புக இருந்த அந்நபரின் நன்மைகள் அவரால் அநியாயம் செய்யப்பட்டவர்களுக்கு எடுத்துக் கொடுக்கப்படும். பின்னர் அவர் திவாலாகி நரகம் புகுவார் என்ற ஹதிஸில், முதலாவதாக இறைவனிடம் முறையிடும்நபர் 'யாஅல்லாஹ் இவர் என்னை திட்டினார்' என்று திட்டுதல் பற்றியேயாகும். எனவே பிறரை அநியாயமாக திட்டுவது சுவனம் புக இருப்பதையே மாற்றி நரகத்தில் இட்டுச்செல்லும் பாவமாகும்.

நபி (ஸல்) அவர்கள் இறைகட்டளையில்லாமல் சுயமாக எதையும் செய்யபவராக இல்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறது. தன்னை இகழ்ந்த யூதர்களை, துன்புறுத்திய இறைமறுப்பாளர்களை எல்லாம் மன்னித்த நபி (ஸல்) அவர்கள், கண்தெரியாத அந்த நபர் அவர் தன் அடிமை மனைவியைக் கொலை செய்து விட்டதாகக் கருதாமல் அவளின் இரத்தத்திற்கு பலி எடுக்கப்படாது என்று அவர்கள் கூறியிருப்பது இறைவனுடைய வழிகாட்டல் இல்லாமல் அவர்கள் கூறியிருக்க முடியாது. அவள் மரண தண்டணை விதிக்கப்படும் அளவிற்கு குற்றம் புரிந்திருப்பது தெரியவருகிறது.

அமைதியையும், சாந்தியையும், மன்னிப்பையும் போதிக்கிறது இஸ்லாம். அதே வேளையில் குற்றம் செய்பவரை தண்டிப்பதிலும் வீரியத்தைக் காட்டுகிறது. இன்னும் இம்மார்க்கத்தின் மீது நியாயமான விமர்ச்சனங்களை வரவேற்கவும் அதற்கு பதிலளிக்கவும் சொல்கிறது இஸ்லாம். அதேநேரத்தில் நபி (ஸல்) அவர்களை எக்காரணமும் இல்லாமல் திட்டினால், கேவலப்படுத்தினால் மரணதண்டனையே வழங்கச் சொல்கிறது. இதை வைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களை திட்டுபவர்களை எவரும் தண்டிக்கலாம் என்று அர்த்தமாகாது அவரை இஸ்லாமிய அரசாங்கங்களே தண்டிக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அபூபக்கர் (ரழி) ஆட்சி காலத்தில் இதே போன்று ஒருவன் அபூபக்கர் (ரழி) அவர்களை திட்டிக் கொண்டே இருந்தான். அப்போது உமர் (ரழி) அவர்கள் அவனுக்கு மரணதண்டனை அளிக்குமாறு ஆட்சித் தலைவராக இருந்த அபூபக்கர் (ரழி) அவர்களிடம் முறையிடுகிறார்கள். அப்போது அபூபக்கர் (ரழி) அவர்கள் மரணதண்டனை என்பது நபிகளாரை விமர்ச்சித்தால்தான் என்று விளக்கி விடுகிறார்கள். (பார்க்க : அபூதாவூது 4349).

நபி (ஸல்) அவர்களை இகழ்ந்தால் அதற்காக இகழ்ந்தவனை எவரும் கொலை செய்யலாம் என்று முஸ்லிம்கள் புரிந்திருந்தால்; இணையத்தில் வசைமாறிப் பொழிந்து கொண்டேயிருக்கும் கொடியவர்களான இவர்கள் இன்னும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பார்களா?. இவர்கள் இன்னும் உயிரோடு இருப்பதே முஸ்லிம்கள் எவரும் அவ்வாறு புரியவில்லை என்பதற்கு சாட்சியாக இல்லையா?.

அல்லது சத்திய இஸ்லாத்தின் அசுர வளர்ச்சியால் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா இஸ்லாமிய நாடாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அப்படி இஸ்லாமிய ஆட்சி இந்தியாவில் அமைந்துவிட்டால் தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள்மீது வசைமாறிப் பொழிவதையே முழுநேர ஊழியமாக நினைத்து செயல்படும் இவர்கள் குற்றவாளிகளாக தண்டிக்கப்பட்டுவார்கள் என்ற அச்சமா? வந்தேறி பார்ப்பன தொடை நடுங்கிகளுக்கும், சமாதான வேஷம் போடும் அல்லேலூயா கும்பலுக்குமே இது வெளிச்சம்.

நயவஞ்சக நரித்தனமே, கொலைவெறியே நீ யாரைத் தண்டிக்கவேண்டும் என்கிறாய்.

நாம் கேட்கிறோம், கடந்த 100 ஆண்டுகளில் இப்பூமியில் தனது போர்வெறியின் காரணமாக மனித இனத்தையே சுத்திகரிப்பு செய்ததிலும், கொடும் தாக்குதல்கள் புரிந்து பல நாடுகளை நிர்மூலமாக்கியதிலும் முன்னனியில் நிற்பவர்கள் அன்றைய ஹிட்லர் முதல், முசோலின் உட்பட அமெரிக்காவின் இன்றைய ஜார்ஜ்புஷ் வரை உள்ள கிருத்தவர்களே. இவர்களுக்கும், இவர்களின் மதத்திற்கும் என்ன தண்டனை கொடுக்கலாம் என்று இவர்கள் முடிவுசெய்யட்டும்.

கிருத்தவர்கள் தங்களின் மதத்தின் பெயரால்தான் அநியாயமான முறையில் பல சிலுவை யுத்தங்களை முஸ்லிம்கள் மீது அன்றுமுதல் இன்றுவரை திணித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு ஓர் சிறந்த உதாரணமாக கடந்த வருடங்களில் இஸ்லாமிய நாடுகளான ஆப்கானையும், ஈராக்கையும் சள்ளடையாகத் துளைத்த கொடியவன் ஜார்ஜ் புஷ், அத்தாக்குதல்களை இது ஓர் சிலுவைப்போர் என்றே அறிவித்தான். அவ்விரு நாடுகளில் மட்டும் பல லட்சக்கனக்கில் சிசுக்களையும், குழந்தைகளையும், பெண்களையும், குண்டுவீசி மொத்தமாக அழித்தது மட்டுமின்றி கவுண்டனாமோ, அபூகிரைப் என்று பல சிறைகளில் முஸ்லீம்களை அடைத்து வைத்து இன்றும் கொடுமைப்படுத்துகிறான். இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று இவர்கள் சொல்வார்களா?

மேலும் ஈராக் அதிபர் சாதாம் ஹூஸைனின் தொண்டைக்குழி வரை டார்ச் லைட்டை வைத்து அடித்து பார்த்தபிறகும் 'வெப்பன்ஸ் ஆப் மாஸ் டிஸ்ட்ரக்சன்' (Weapons of Mass Destruction) என்று இவன் கூறிய பொய்க்கூற்றை நிரூபிக்க முடியாமல் போன இந்த ஜார்ஜ்புஷ், முஸ்லிம்களை அழித்த கையோடு அன்று உயிரோடு இருந்த கிருத்தவ மதத்தலைவர் போப் இரண்டாம் ஜான்பாலிடம் சென்று ஆசிபெற்றானே இவனுக்கும், அவனது கொடுஞ்செயலுக்கு பக்கபலமாக என்றும் நிற்கும் கிருத்தவத் திருச்சபைகளுக்கும் என்ன தண்டனை கொடுக்கலாம் என்று சொல்லுங்கள்?. இவைகளை எல்லாம் போதையிலே இருக்கும் இவர்கள் வேண்டுமென்றால் மறக்கலாம், மறைக்கலாம். ஆனால் சுயநினைவுள்ள, நிடுநிலை எண்ணம் கொண்ட மக்கள் எவரும் மறக்க மாட்டார்கள்.

இன்னும், அன்று இவ்வுலகில் தோன்றிய நபிமார்கள் எனப்படும் பல தீர்க்கதரிசிகளை கொலைசெய்தது முதல் இன்று யூதர்களின் நாடு என்ற இல்லாத இஸ்ரேலை உருவாக்கிக் கொண்டு, தொடந்து பாலஸ்தீன முஸ்லீம்களின் ரத்தத்தை அட்டைப்பூச்சிபோல் உருஞ்சிக்கொண்டிருக்கும் ஜியோனிஸ யூதவெறியர்களுக்கும், அவர்களின் மதப் போதகர்களுக்கும், அந்த யூத மதத்திற்கும் என்ன தண்டனை கொடுக்கலாம் என்று சொல்லுங்கள்.

நம் இந்தியாவை எடுத்துக் கொண்டால் இந்து ராஷ்ட்டிரத்தை அமைக்கப் போகிறோம் என்ற வெறிக்கூச்சலோடுதான் சங்பரிவாரங்கள் இந்திய முஸ்லிம்களைக் கூட்டம் கூட்டமாக கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். யூதவெறி ஜியோனிஸ மொசாத்தோடு கைகோர்த்துக் கொண்டு, 1921 முதல் இன்று வரை இந்துத்துவத் தீவிரவாதிகள் முஸ்லிம்களை கிராமம் கிராமமாக கொலை செய்கின்றனரே அது எதற்காக என்று இவர்களுக்கு விளங்காதா? எனவே முதலில் அந்த இந்து மதத்திற்கும், இந்துத்துவத் தீவிரவாதிகளுக்கும் என்ன தண்டணை கொடுக்கலாம் என்று இவர்கள் கூறட்டும். இவ்வாறு இந்தியாவில் இந்து ராஷ்ட்டிரம் அமைப்பதற்காக பூண்டோடு அழிக்கப்பட்ட முஸ்லிம் கிராமங்களின் சிலவற்றின் பட்டியல் இதோ.

ஊர் பெயர்

கலவரம் நடந்த ஆண்டு

கொல்லப்பட்ட முஸ்லிம்கள் / சூறையாடப்பட்ட முஸ்லீம்களின் சொத்துக்கள்

மொராதாபாத்

1980

142 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்

சூரத்

1982

100 முஸ்லிம்கள் / 25 கோடிக்கு மேல்

மீரட்

1983

கணக்கிடப்படவில்லை

பீஹார்

1981

25 முஸ்லிம்கள் / 5 கோடிக்கு மேல்

பூனா

1982

30 முஸ்லிம்கள் / 3 கோடிக்கு மேல்

அஹ்மதாபாத்

1982

30 முஸ்லிம்கள் / 125 கோடிக்கு மேல்

நெல்லி, அஸ்ஸாம்

1983

2191 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்

மீரட்

1987

130 முஸ்லிம்கள் / 100 கோடிக்கு மேல்

பாகல்ப்பூர்

1989

1000 முஸ்லிம்கள் / 125 கோடிக்கு மேல்

பரோடா

1990

600 முஸ்லிம்கள் / 10 கோடிக்கு மேல்

அயோத்தி

1992

300 வீடுகள் மற்றும் பள்ளிவாயில்கள்

போபால்

1992

141 முஸ்லிம்கள் / 26 கோடிக்கு மேல்

சூரத்

1992

30 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்

கோயம்புத்தூர்

1997

19 முஸ்லிம்கள் / 100 கோடிக்கு மேல்

கான்பூர்

2001

100 கோடிக்கு மேல் சூறையாடப்பட்டன

குஜராத்

2002-2003

ஆயிரக்கனக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். மதிப்பிடமுடியாத அளவு சொத்துக்கள் சூறையாடப்பட்டன.

இவ்வாறு இந்தியத்திருநாடு இந்துத்துவத் தீவிரவாதிகளால் சுடுகாடாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவர்கள் திட்டமிட்டு நாட்டில் ஏற்படுத்திய கலவரங்கள் ஏராளம். அவைகளில் பாதிக்கபட்டவர்களும், உயிர்நீத்தவர்களும் பெரும்பாலும் முஸ்லீம்களே!. நம்நாட்டில் 1960 முதல் 1970 வரை இவர்கள் நடத்திக்காட்டிய வன்முறைகள் 7974, மேலும் 1971 லிருந்து 1981 வரை 5000 கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதில் 1981 ஆண்டு மட்டும் 319 கலவரங்களும், 1982ல் 474 கலவரங்களும், 1983 ம் ஆண்டு 500 கலவரங்களும் ஏற்பட்டன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்துத்துவத் தீவிரவாதிகள் ஏற்படுத்திய கலவரங்களைப் பற்றி இந்திய உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட பட்டியல் இதோ.

வருடம்

கலவரங்கள்

இறந்தவர்கள்

காயமடைந்தவர்கள்

2003

711

193

2261

2004

672

134

2132

2005

779

124

2066

2006

693

133

3170

2007

191

23

611

மேலும் குஜராத்தில் நரபலி நரந்திர மோடியின் கூலிப்படையினர் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த காட்சிகளை உலகம் எளிதில் மறக்க இயலுமா? டெகல்கா இணையதளம் கிழித்தெறிந்த சங்பரிவாராத்தின் கோர முகமூடிகளை கட்டுரைகள் மூலம் சொல்லிவிடத்தான் முடியுமா? அங்கு முஸ்லீம் இளம் பெண்களை முழுநிர்வானமாக நடுத்தெருவில் ஓடவிட்டு, அத்தெருவின் மறுமுனையில் சங்பரிவாரக் குண்டர்கள் அவர்களை ஒவ்வொருவரையும் பிடித்து கற்பழித்து அதை வீடியோ படம் எடுத்தனர். எடுக்கப்பட்ட அப்படங்களை ஆர்எஸ்எஸ் இன் குண்டர்படை கேம்ப்புகளில் அவற்றை போட்டுக்காண்பித்து, முஸ்லீம் பெண்களை இப்படித்தான் கற்பழிக்கவேண்டும் என்று பயிற்சியும் அளிக்கப்பட்டு, பார்த்து ரசித்ததை நாங்கள் மறந்துவிடுவோமா?.

அதே குஜராத்தில் நிறைமாதக் கற்பிணி என்றும் பாராமல் அவளின் வயிற்றை கிழித்து உள்ளே உறங்கிக்கொண்டிருந்த சிசுவை சூழாயுதத்தில் குத்தி எடுத்து அதை பெட்ரோல் ஊற்றியும் எறித்தார்களே சங்பரிவாரக் குண்டர்கள், அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று முதலில் நாம் முடிவு செய்வோம்.

இஸ்லாத்திற்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று கேட்கும் இம்முட்டாள்களைப் பார்த்து நாங்கள் மேலும் கேட்கிறோம், கனவன் பார்க்க ஆசை மனைவியை, தந்தை கண்முன்னர் அருமை மகளை, அண்ணனை பார்க்கச்செய்து தங்கையை, பெற்ற பிள்ளைகள் எதிரே தாயை கற்பழித்து குற்றுயிராக்கி, அவர்களின் பெண்ணுறுப்பில் மரக்கட்டையையும் சொருகி, அம்முஸ்லிம் பெண்களை நெருப்புக் குண்டத்தில் துடிக்கத்துடிக்க வீசிஎறிந்த கர்மகொடூரத்தை செய்துவிட்டு, இந்துமதத்தை நிலைநாட்டுவதற்காகவே இவைகளை செய்தோம் என்று டெகல்காவிற்கு பேட்டியும் அளித்த குஜராத் வக்கிரபுத்திகாரர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? அவந்த இந்துத்துவ வெறியர்கள் நிலைநாட்டத் துடிக்கும் இந்து மதத்திற்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? என்று கயவர்களே நீங்கள் முதலில் சொல்லுங்கள். அதன் பிறகு பேசுவோம் இஸ்லாத்தைப் பற்றி. அதுவரை இஸ்லாத்தை பற்றி பேச உங்களுக்கு அருகதையே இல்லை.

கடந்த அக்டோபர் 2007லிருந்து இன்றுவரை உலக அரங்கில் இந்திய ஜனநாயகத்தின் புகழ் நாற்றமெடுத்து நாறும்படி செய்த டெகல்கா புகழ் நரபலி நரேந்திர மோடியின் கொடியசெயலுக்கும், அவனது இந்து ராஷ்ட்டிரக் கனவிற்கும் பச்சைக்கொடி காட்டி பக்கபலமாக இருக்கும் கொலைவெறி நிர்வான சாமியார்களுக்கும் என்ன தண்டனை கொடுக்கலாம்? என்று இவர்கள் முதலில் முடிவு செய்யட்டும் அதன் பிறகு இஸ்லாத்தை தாக்கி எழுதுவதற்கு ஏதேனும் ஹதீஸ்கள் கிடைக்கின்றனவா என்று தேடிஅலையட்டும்.

அபூதாவூதின் அந்த அறிவிப்பை விளங்காமல், இப்படி போதிக்கும் மதத்திற்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? என்று அவசரப்பட்டு கேட்டுவிட்டனர். மேற்காணும் அந்த ஹதீஸ் எதைப் போதிக்கிறது என்பதை தெளிவாக நாம் விளக்கிவிட்டோம். நயவஞ்சகத்தனமாக எழுதியுள்ள இவர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்பதை அவர்களே இப்போது முடிவுசெய்யட்டும்.

No comments: