அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, May 25, 2009

திரு.வி.க. நகரில் இளம் பெண் கடத்தல்; காதலனின் நண்பர்கள் கைது

-
 
சென்னை திரு.வி.க. நகர் பாண்டியன் தெருவை சேர்ந்தவர் முகமதுசாபிக் இவரது மகள் நபியா பாத்திமா (வயது 16) இவரும் கொரட்டூரை சேர்ந்த கணேஷ் (24) என்ற வாலிபரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
 
சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த நபியா பாத்திமாவை கணேஷ், தனது நண்பர்களுடன் வந்து ஆசைவார்த்தை கூறி ஆட்டோவில் அழைத்து சென்றார். பின்னர் அவருடைய நண்பர்கள் துணையுடன் கட்டாய திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. மகளை காணாமல் தேடிய முகமது சாபிக் இது குறித்து திரு.வி.க. போலீசில் புகார் செய்தார்.
 
புகாரின் பேரில் மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
 
கொரட்டூர் வீட்டில் இருந்து நபியா பாத்திமாவை மீட்டனர். கணேஷ் தப்பி ஒடிவிட்டார். துணையாக இருந்த நண்பர்கள் கல்யாணகுமார், நாகராஜ் கைது செய்யப்பட்டனர். நபியா பாத்திமா விரும்பிச்சென்றாலும் அவர் 16 வயது பெண் என்பதால் கடத்தலாகவே கருத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர். ஏற்கனவே 3 மாதங்களுக்கு முன்பு நபியா பாத்திமாவை கணேஷ் கடத்தி சென்றதாக நீலாங்கரை போலீசார் கைது செய்தது என்பது குறிப்பிட தக்கது.

No comments: