அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, May 25, 2009

மகாராஷ்டிரா-பாஜக தலைவர் காரில் சிறுமியி்ன் பிணம்


நாக்பூர்: மகாராஷ்டிரா பாஜக தலைவர் நிதின் காட்காரின் காரில் 7 வயது குழந்தையின் பிணம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தை மூச்சுத்திணறல் காரணமாக இறந்திருக்கலாம் என தெரிகிறது.

மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவராக இருப்பவர் நிதின் காட்கர். இவரது வீடு நாக்பூர் பகுதியில் உள்ள மஹல் அருகே உள்ளது. இந்நிலையில் நேற்று இவரது வீட்டுக்கு அருகே இருக்கும் யோகிதா அசோக் தாக்ரே என்ற 7 வயது பெண் குழந்தையின் பிணம் காட்கரின் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவரது காரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வீட்டு வேலை செய்து வரும் அந்த குழந்தையின் தாய் மற்றும் தந்தை தங்களது குழந்தையை யாரோ கற்பழித்து கொன்று இருப்பதாக புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அதில் அந்த குழந்தை கற்பழித்து கொலைசெய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் மதியம் காருக்குள் புகுந்த அந்த குழந்தை மாலை வரை காருக்குள் அடைந்து கிடந்ததால் மூச்சு திணறி உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து போலீசார் இந்த வழக்கை ஒரு விபத்தாக பதிவு செய்துள்ளனர்.

No comments: