அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, June 16, 2009

துபாயில் 3 இந்தியர் பலி



துபாயில் நிகழ்ந்த சாலை விபத்தில், மூன்று இந்தியர்கள் பலியாயினர்.

துபாயில், காரில் பயணம் செய்து கொண்டிருந்த இந்தியர் ஒருவரின் கார் டயர் வெடித்ததால், சாலை ஓரத்தில் காரை நிறுத்தி வைத்திருந்தார்.

அந்த வழியாக காரில் வந்த மேலும் இரு இந்தியர்கள், அவருக்கு உதவுவதற்காக தங்களது காரை நிறுத்தினர்.

அப்போது, மிக வேகமாக வந்த மற்றொரு கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, இந்தியர்கள் மூன்று பேர் மீதும் பயங்கரமாக மோதியது.

இதில், இந்தியர்கள் மூன்று பேரும் பலியாயினர்.

கார் வேகமாக மோதியதால் இருவரின் உடல்கள், அருகிலுள்ள மணல் பரப்பில் தூக்கி வீசப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், மோதிய காரை ஓட்டி வந்த சிரியாவைச் சேர்ந்த நபரை கைது செய்தனர்.

இவர், குடித்து விட்டு கார் ஓட்டியது தெரியவந்தது.

விபத்தில் இறந்த இந்தியர்களின் பெயர் மற்றும் விவரங்கள் வெளியாகவில்லை.


No comments: