அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, July 2, 2009

போலீஸ் பணிக்கு 4,000 பேர் தேர்வு

தமிழகத்தில் சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில், போலீஸ் பணிக்கு 4,000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
போலீஸ் துறையில் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு 2,800 ஆண்களும், 1,200 பெண்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இப்பணிக்கு ஜூலை 29க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை ஆங்கிலத்தில் தான் எழுதி அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்துடன் 150 ரூபாய்க்கான டிமாண்ட் டிராப்டை அனுப்ப வேண்டும்.
அதனுடன் ஆறு ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டிய, சுயமுகவரியிட்ட தபால் உறையையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
தகுதியானவர்களுக்கு எழுத்துத் தேர்வு அக்., 25ம் தேதி நடைபெறும்.
அதில் தேர்ச்சி பெற்ற பின் அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் உடல் கூறு அளத்தல், உடல் தாங்கும் திறனறி தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும்.
எழுத்துத் தேர்வு பொது அறிவு (50 மதிப்பெண்), உளவியல் (30 மதிப்பெண்) என இருபிரிவாக 80 மதிப்பெண்களுக்கு இருக்கும்.
எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 28 மதிப்பெண் பெற வேண்டும்.

No comments: