அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, March 11, 2010

நித்யானந்தா : மசாஜ் காட்சிகளுடன் மேலும் ஒரு சிடி!




நடிகை ரஞ்சிதா நித்யானந்தாவுக்கு மசாஜ் செய்யும் காட்சிகள் அடங்கிய மேலும் ஒரு சிடி வெளியாகி உள்ளதை அடுத்து நித்யானந்தா விவகாரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா படுக்கையறையில் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அண்மையில் தொலைக்காட்சி ஒன்றிலும், வார இதழ் ஒன்றிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ காட்சி குறித்து கருத்து தெரிவித்த நித்யானந்தா, தான் சட்டப்படி தவறு செய்யவில்லை என்று கூறியிருந்தார்.

அதுவரை இந்த வீடியோ காட்சிகள் மோர்ஃபிங் செய்யப்பட்டவை என்று கருதி வந்த நித்யானந்தாவின் சீடர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இது அடங்குவதற்குள் நித்யானந்தா ரஞ்சிதா சம்பந்தப்பட்ட மேலும் ஒரு சிடி வெளியாகி உள்ளது.

படுக்கை அறைக்குள் நித்யானந்தா நுழைகிறார். சிறிது நேரம் கழித்து நடிகை ரஞ்சிதா அந்த அறைக்கு வருகிறார். சாமியாரின் தோளில் கிடந்த துண்டை எடுத்துவிட்டு, அவருடைய சட்டையையும் கழற்றிவிடுகிறார். வேட்டி உடுத்திய நிலையில் நித்யானந்தா அமர்ந்திருக்க, அவரது உடலுக்கு ரஞ்சிதா எண்ணெய் தேய்த்து மாசஜ் செய்கிறார்.

இந்த காட்சிகள் டிசம்பர் 25ஆம் தேதி காலை நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நித்யானந்தாவின் சீடர் லெனின் என்ற நித்ய தர்மானந்தா சில நாட்களுக்கு முன் சென்னை காவல் துறை ஆணையரைச் சந்தித்து சில சிடிகளை அளித்தது நினைவிருக்கலாம். அவற்றில் ஒன்றே இந்த மசாஜ் சிடியும் என்று கூறப்படுகிறது.

No comments: