அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, June 15, 2010

இரகசிய சமுதாயம் - தொடர்-3


ஐக்கிய இரகசிய இராஜ்ஜியம்

இரண்டாம் எலிசபெத் (Elizabeth II, எலிசபெத் அலெக்சாந்திரா மேரி; பிறப்பு: ஏப்ரல் 21, 1926) என்பவர் ஐக்கிய இராச்சியம் உட்பட 16 சுயாட்சி நாடுகளின் அரசியாக உள்ளார். அனைத்து நாடுகளுக்கும் இவர் தனித்தனியே வெவ்வேறு பெயர்களில் ஆட்சிப் பெயர்களைக் கொண்டிருந்தாலும், ஐக்கிய இராச்சியத்திலேயே, லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் இவர் வாழ்கிறார். பிப்ப்ரவரி 1952 ஆம் ஆண்டில் இவரது தந்தை ஆறாம் ஜார்ஜ் இறந்தவுடன் ஏழு நாடுகளுக்கு அரசியாக இவர் முடி சூடினார். ஐக்கிய இராச்சியம் தவிர, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜெமெய்க்கா, பார்படோஸ், பகாமாஸ், கிரெனாடா, பப்புவா நியூ கினி, சொலமன் தீவுகள், துவாலு, சென் லூசியா, சென் வின்செண்ட் மற்றும் கிரெனாடின்ஸ், பெலீஸ், அண்டிகுவா பார்புடா, சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகிய நாடுகளுக்கு அரசியாக உள்ளார். இவை அனைத்துக்கும் இவர் தனது சார்பில் பொது ஆளுநர் ஒருவரை நியமித்துள்ளார். இந்நாடுகள் அனைத்தும் பொதுநலவாய நாடுகள் (Commonwealth realm) என அழைக்கப்படுகின்றன.





பிரிட்டானிய அரசி எலிசபத்தின் அரசகுடும்பம் தாங்கள்தாம் தாவீது ராஜாவின் வம்சவழியினர் என்பதாக பரைசாற்றுகின்றனர். பிரிட்டனை ஆளும் இந்த (windsor) வின்ட்ஸர் அரச பரம்பரையினரே ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் ஆட்சி புரிகின்றனர்.

இந்த வின்ட்ஸர் பரம்பரையோடு ஸ்காட்லாந்தின் ஸ்பென்ஸர் (ஸ்டிவார்ட்) அரச குடும்பம் மிக நெருக்கமான உறவு வைத்துள்ளனர். மறைந்த இளவரசி டயானாவும் இதே ஸ்பென்ஸர் பரம்பரையைச் சார்ந்தவர்தாம். கிபி 1060 பிறந்த பிரென்சு படைவீரன்; காட்ஃபிரே ஆப் ப்ய்லன் (Godfrey of Bouillon) தன்னை மிரோவின்ஜியன் இரத்தபந்தம் என்று அறிவித்துக் கொண்டு ஜெரூசலத்தின் மீது பலமுறை சிலுவையுத்தங்களை நடத்தினான். பின்னர் தன்னை ஜெரூசலத்தின் மன்னனாக கி.பி 1099ல் பிரகடனப் படுத்தினான்.

இது உலகை ஆண்ட பிரிட்டனின் முடியாச்சிக்கு பெரும் தலையிடியாக அமைந்தது. எனவே வின்ட்ஸர் அரச குடும்பம் பிரிட்டன் முடியாச்சியை சக்திமிக்க பேரரசாக மாற்றி இவ்வுலகை ஆளவேண்டுமெனில் தங்களோடு மிரோவின்ஜியன் இரத்தபந்தமும் கலந்து அதில் பிறக்கும் ஒருவனாலேயே முடியும் என்ற முடிவிற்கு வந்தனர். தங்களின் கொடுங்கோள் பரம்பரைதான் ஐரோப்பாவை ஆள வேண்டும் என்ற தீராதமுடிவிலுள்ள இந்த எலிசபெத் வகையராக்கள் இறுதியில் மிரோவின்ஜியன் இரத்தபந்தத்தில் பிறந்த இளவரசி டயானாவை தெய்வீகம் பொருந்திய புனிதப் பெண்மணி என கண்டுபிடித்தனர். ஏசுவின் பரிசுத்த இரத்தம் இளவரசி டயானா மூலம் பாதுகாக்கப்படுகிறது என்ற நம்பிக்கையில் இளவரசர் சார்லஸூக்கு அவளை மணமுடித்தனர்.

வின்ட்ஸரின் அரச பரம்பரையினர் மட்டுமே கலந்து கொண்ட அந்தத் திடீர் திருமணத்தில் பலவிதமான இரகசிய சடங்குகள் செய்யப்பட்டன. திருமண மேடையில் வீற்றிருந்த டயானா அன்று 3 மாத கற்பிணி. திருமணமாகி 6 மாதங்களில் இளவரசன் வில்லியம்ஸ் என்ற குழந்தையைப் பெற்றெடுத்தாள். இதுபோன்ற இரகசியங்கள் 1982 ம் ஆண்டு வாக்கில் வெளியுலகிற்குத் தெரியவந்தது.

Click here to download this video

இவர்களின் ஷைத்தானிய வேலைகளை தோலுரித்துக் காட்டும் அருள்மறை குர்ஆனின் எச்சரிக்கை வசனங்கள் இதோ...

(நபியே!) அவர்கள் எவ்வாறு அல்லாஹ்வுக்கு இணையுண்டென்று பொய்க்கற்பனை செய்கிறார்கள் என்பதை கவனியும். இதுவே அவர்களுடைய பகிரங்கமான பாவத்துக்குப் போதுமான சான்றாக இருக்கின்றது. (4:50)

இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்குமிடையில் வம்சாவளி உறவை கற்பனையாக ஏற்படுத்துகின்றனர். ஆனால் ஜின்களும் மறுமையில் இறைவன் முன் நிச்சயமாகக் கொண்டுவரப்படுவார்கள் என்பதை அறிந்தேயிருக்கிறார்கள். (37:158)

... அவர்கள் ஜின்களை அல்லாஹ்வுக்கு இணையானவர்களாக ஆக்குகிறார்கள் அல்லாஹ்வே அந்த ஜின்களையும் படைத்தான் இருந்தும் அறிவில்லாத காரணத்தால் இணைவைப்போர் அவனுக்குப் புதல்வர்களையும், புதல்விகளையும் கற்பனை செய்து கொண்டார்கள் - அவனோ இவர்கள் இவ்வாறு வர்ணிப்பதிலிருந்து தூயவனாகவும், உயர்ந்தவனுமாக இருக்கிறான். (6:100)

தாவீது ராஜாவின் பரம்பரை, ஏசுவின் இரத்தபந்தம், தெய்வீக பெண்ணின் கருவரை, என்பதெல்லாம் இவர்கள் தேசங்களை ஆள்வதற்கு அமைத்துக் கொண்ட வீன் கற்பனையே அன்றி வேறில்லை. இவர்கள் புனித வேதமாகக் கருதும் பைபிளையும், கடந்த கால நாகரிகத்தின் வரலாறுகளையும் ஆய்வுசெய்து கற்பனையாக வடிவமைத்த இரகசிய அரசியல் கோட்பாடுகள் இறுதியில் அவர்களை சாத்தானை வணங்கும் அளவிற்கு இட்டுச்சென்றுவிட்டதை தெளிவாக அறியமுடிகிறது.

இதற்கு சிறந்த உதாரணமாக இவர்கள் ஆட்சிபுரியும் பக்கிங்ஹாம் அரண்மனை முதல், அதன் வாயில், கொடி என்று துவங்கி இவர்கள் அணியும் ஆடைகள்வரை சாத்தானிய குறியீடுகளை முன்னிலைப் படுத்துவதைக் காணலாம்.

இந்த படத்தில் காணும் 'சிவப்பு கடல் நாகம்' சாத்தானை குறிப்பதாகும். ஏசுவின் இரத்த பந்தத்திலும், சாத்தானின் வித்திலும் உருவாகும் 13 வது மிரோவின்ஜியன் வாரிசிலிருந்துதான் அந்தி கிருஸ்துவான தஜ்ஜால் வருவான் என்பது இவர்களின் நம்பிக்கை. மேற்காணும் இந்த படத்தின் பின்னனியில் பைபிளின் ஒரு சரித்திரம் உண்டு. பைபிளோடு தொடர்புடையவர்களுக்கு நன்கு புரியும்.அதை அப்படியே கீழே தருகிறோம். (இதன் வீடியோ பதிவை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.)

1 பாபிலோன் ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் முதலாம் வருஷத்திலே தானியேல் ஒரு சொப்பனத்தையும் தன் படுக்கையின்மேல் தன் தலையில் தோன்றினதரிசனங்களையும் கண்டான். பின்பு அவன் அந்தச் சொப்பனத்தை எழுதி, காரியங்களின் தொகையை விவரித்தான்.

2 தானியேல் சொன்னது: இராத்திரி காலத்தில் எனக்கு உண்டான தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: இதோ, வானத்தின் நாலு காற்றுகளும் பெரிய சமுத்திரத்தின்மேல் அடித்தது.

3 அப்பொழுது வௌ;வேறு ரூபமுள்ள நாலு பெரிய மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பின.

4 முந்தினது சிங்கத்தைப்போல இருந்தது. அதற்குக் கழுகின் செட்டைகள் உண்டாயிருந்தது. நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அதின் இறகுகள் பிடுங்கப்பட்டது. அது தரையிலிருந்து எடுக்கப்பட்டு, மனுஷனைப்போல இரண்டு காலின்மேல் நிமிர்ந்து நிற்கும்படி செய்யப்பட்டது. மனுஷ இருதயம் அதற்குக் கொடுக்கப்பட்டது.

5 பின்பு, கரடிக்கு ஒப்பாகிய வேறே இரண்டாம் மிருகத்தைக் கண்டேன். அது ஒரு பக்கமாய்ச் சாய்து நின்று, தன் வாயின் பற்களுக்குள்ளே மூன்று விலாவெலும்புகளைக் கவ்விக்கொண்டிருந்தது. எழும்பி வெகு மாம்சம்தின்னென்று அதற்குச் சொல்லப்பட்டது.

6 அதின்பின்பு, சிவிங்கியைப்போலிருக்கிற வேறொரு மிருகத்தைக் கண்டேன். அதின் முதுகின்மேல் பட்சியின் செட்டைகள் நாலு இருந்தது. அந்த மிருகத்துக்கு நாலு தலைகளும் உண்டாயிருந்தது. அதற்கு ஆளுகை அளிக்கப்பட்டது.

7 அதற்குப்பின்பு, இராத்தரிசனங்களில் நாலாம் மிருகத்தைக் கண்டேன். அது கொடியும் பயங்கரமும் மகா பலத்ததுமாயிருந்தது. அதற்குப் பெரிய இரும்புப்பற்கள் இருந்தது. அது நொறுக்கிப் பட்சித்தது. மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டது. அது தனக்கு முன்னிருந்த எல்லா மிருகங்களைப் பார்க்கிலும் வேற்றுருவமாயிருந்தது, அதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தது.

8 அந்தக் கொம்புகளை நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று. அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்றுபிடுங்கப்பட்டது. இதோ, அந்தக் கொம்பிலே மனுஷ கண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவைகளைப் பேசும் வாயும் இருந்தது. (Dan 7 :1-8)

நான் கண்ட மிருகம் சிறுத்தையைப்போலிருந்தது, அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன, வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது. (Rev 13:2)
அதின் தலைமேலுள்ள பத்துக்கொம்புகளைக்குறித்தும், தனக்கு முன்பாக மூன்று கொம்புகள் விழுந்துபோக எழும்பினதுமாய், கண்களையும் பெருமையானவைகளைப் பேசும் வாயையுமுடையதுமாய், மற்றவைகளைப்பார்க்கிலும் பருமனாகத்தோன்றினதுமாயிருந்த அந்த வேறே கொம்பைப்குறித்தும், அவற்றின் பொருளை அறிய மனதாயிருந்தேன். (Dan 7:20)
அந்தக் கொம்புகளை நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று. அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்றுபிடுங்கப்பட்டது. இதோ, அந்தக் கொம்பிலே மனுஷ கண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவைகளைப் பேசும் வாயும் இருந்தது. (Dan 7:8)
அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்றுபிடுங்கப்பட்டது. இதோ, அந்தக் கொம்பிலே மனுஷ கண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவைகளைப் பேசும் வாயும் இருந்தது. (Dan 7:8)
அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடை செய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே. அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது. ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது.
(2 Thess 6-7)

Click here to download this video

இது போன்ற சாத்தானிய சக்த்திகளை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சித்திரங்களை, கட்டிடங்கள், சினிமாக்கள், புத்தகங்கள், ஆடைகள் போன்றவற்றில் இவர்கள் திட்டமிட்டு விளம்பரம் செய்கின்றனர். அதன் உள்நோக்கம் என்ன என்பதை தனி கட்டுரையில் விரிவாக வெளியிடுவோம் இன்ஷா அல்லாஹ். எனவே இத்தொடர் கட்டுரைகளை நீங்கள் படிப்பதோடு, மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்திட வேண்டுகிறோம்.

இவர்கள்தாம் தங்களுக்கு தாங்களே நஷ்டம் விளைவித்துக் கொண்டார்கள் இவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்த தெய்வங்கள் யாவும் தீர்ப்பு நாளில் இவர்களை விட்டு மறைந்துவிடும். (11:21)

... நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசகிறோம் அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது. பின்னர் (அசத்தியம்) அழிந்ததே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் கற்பனையாக இட்டுக்கட்டி வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான். (21:18)

தொடரும் இன்ஷா அல்லாஹ்....

No comments: