அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, November 6, 2011

மாணவன் மர்ம மரணம்மருத்துவமனை முற்றுகை

காங்கேயம்: படியூர் தனியார் ஐ.டி.ஐ.,யில் மாணவன் மர்மமாக மரணமடைந்தார்.காங்கேயத்தில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.,யில், காளிபாளையம் முத்துசாமி மகன் ரமேஷ்குமார் (21), படித்தார். நேற்று முன்தினம் மாலை ஐ.டி.ஐ.,யில் ரமேஷ்குமார் மயக்கமடைந்ததாக கூறி, காங்கேயம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மாலை 4.30க்கு ரமேஷ்குமார் இறந்து போனார்.மாணவரின் உடல் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
நேற்று காலை பிரேத பரிசோதனையின் போது, ஐ.டி.ஐ., தரப்பில் யாரும் வரவில்லை. "ஐ.டி.ஐ., நிர்வாகி வரவேண்டும்' என, உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின், மாணவன் உடலை, உறவினர்கள் வாங்கிச் சென்றனர். ஐ.டி.ஐ., நிர்வாக இயக்குனர் தர்மராஜிடம், போலீஸார் விசாரணை நடத்தினர்.

No comments: