அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, March 3, 2009

கிருஸ்தவர்களுக்கு பல்லாயிரம்கோடி கடவுள்களா?


(திருக்குர்ஆன் ஏசுவை கடவுள் என்கிறது என்று அவதூறு பரப்பிய உண்மையடியானுக்கு மறுப்பு)

பொய்யடியானின் பொய் கூற்று 4

//9:28 ல் குர்ஆன் அனைவரையும் கெட்டவர்கள் என்று கூறுகிறது. ஏசு மட்டும்தான் பரிசுத்தமானவர். ஏசுவை சாத்தான் தீண்டாததற்குக் காரணம் அவர் கடவுளாக இருக்கிறார். கடவுளை ஷைத்தான் தீண்ட இயலுமா? //

நமது விளக்கம்:-

அன்பு நண்பர்களே! பைபிளின் மத்தேயு 4 அதிகாரம் 1-11 வசனங்கள் ஏசு சாத்தானால் ஆட்கொள்ளப்பட்டார் என்று தெரிவிப்பதை முன்னர் பார்த்தோம். ஏசுவை திருக்குர்ஆனும் நபிமொழியும் கடவுள் என்கிறது என்று உண்மையடியான் எடுத்து வைத்த வாதங்கள் அனைத்தும் தவிடு பொடியாகிக் கொண்டிருப்பதை நீங்கள் உணர்ந்து கொண்டீர்கள். வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக தற்போது குர்ஆன் அனைவரையும் கெட்டவர்கள் என்று கூறுகிறது என்கிறார் இவர்.

உண்மையடியான் கெட்ட ஷைத்தானாக இருப்பதால், தன்னைப் போன்றுதான் மற்றவர்களும் இருப்பார்கள் என்று நினைத்துவிட்டார் போலும். திருக்குர்ஆனின் 9:28 வசனத்தை பார்ப்பதற்கு முன்னர் ஏசுவை ஷைத்தான் தீண்டததற்குக் காரணம் அவர் கடவுளாக இருக்கிறார். கடவுளை ஷைத்தான் தீண்ட இயலுமா? என்ற அவரது வினாவிற்கு விடையை காண்போம்.
நபி ஈஸா (அலை) அவர்கள் பிறந்த போது ஏன் ஷைத்தான் தீண்டவில்லை என்பதை நாம் ஏற்கனவே விளக்கிவிட்டோம். அதற்குக் காரணம் மர்யம் (அலை) அவர்கள் தாயாரின் பிரார்த்தனை என்பதை பொய்யடியான் எடுத்துவைத்த இறைவசனத்திருந்தே நாம் நிரூபித்தோம். இறை தீர்க்கதரிசிகளான நபிமார்களையும், இறைவிசுவாசங்கொண்ட முஃமின்களையும் ஷைத்தானால் தீண்ட இயலாது என்பதையும் முன்னர் நாம் விளக்கினோம். அந்த வரிசையில் மற்றுமொரு ஹதீஸ்

மேற்கண்ட ஹதீஸின் தமிழ் மொழிபெயர்ப்பு

''என் உயிரை தன் கையில் வைத்திருப்பவனின் மீது சத்தியமாக! ஒரு தெருவில் உமரே நீங்கள் நடந்து செல்வதை ஷைத்தான் கண்டால், அவன் உங்கள் தெருவை விட்டு வேறொரு தெருவில் தான் செல்வான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி:3689).

அதாவது உமர் (ரழி) அவர்களுக்குப் பயந்து ஷைத்தான் வெருண்டோடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நன்மக்களே! உண்மையடியானின் வாதம் சுருக்கமாக சொல்லப்போனால் இரண்டுதான்.
1) ஏசு பரிசுத்தமானவர் அதனால் அவர் கடவுள்.
2)ஏசுவை ஷைத்தான் தீண்டாததற்குக் காரணம் அவர் கடவுளாக இருக்கிறார்.

இவரின் ஆராய்ச்சிபடி யாரெல்லாம் கடவுள்கள் ஆகிறார்கள், உண்மையடியானுக்கு எத்தனை கோடி கடவுள்கள் என்பதைப் பாருங்கள்

1. உண்மையடியான் எடுத்துக்காட்டிய புகாரி 4548வது ஹதீஸூம், திருக்குர்ஆனின் 3:36 வது வசனமும் மர்யம் (அலை) அவர்களை பரிசுத்த அன்னையாகக் கூறுகிறது. எனவே உண்மையடியானின் ஆராய்ச்சிபடி அன்னை மர்யம் (அலை) அவர்கள் கிருஸ்தவர்களுக்கு கடவுளாக ஆகிறார்கள்.

2. அன்னை ஆயிஷா (ரழி)அவர்களும், நபித்தோழர் இப்னு மஸ்வூத் (ரழி) அவர்களும்; அறிவிக்கின்ற முஸ்லிமில் பதிவாகியுள்ள அந்த இரண்டு ஹதீஸ்களும் நபி (ஸல்) அவர்களை ஷைத்தான் எதுவும் செய்ய இயலாது என்பதை தெளிவுபடுத்துகிறது. எனவே உண்மையடியானின் லாஜிக்படி நபி (ஸல்) அவர்களும் கிருஸ்தவர்களுக்கு கடவுளாக ஆகின்றார்கள்.

3. மேற்கண்ட புகாரி 3689 வது ஹதீஸின் படி உமர் (ரழி) அவர்களுக்குப் பயந்து ஷைத்தான் வெருண்டோடுவான். நபி ஈஸா (அலை) அவர்கள் பிறந்தவுடன் ஷைத்தான் தீண்டவில்லை அதனால் அவர்கள் கடவுள் என்றால், ஒருவரைப் பார்த்து ஷைத்தான் விரண்டோடினால் அவர் எவ்வளவு பெரிய கடவுளாக இருக்க வேண்டும். எனவே உண்மையடியானின் ஆய்வின் அடிப்படையில் உமர் (ரழி) அவர்களும் கிருஸ்தவர்களுக்கு கடவுளாக ஆகிறார்கள்.

4. இவ்வுலகில் அவதரித்த தீர்க்கதரிசிகளான லட்சக்கணக்கான நபிமார்கள் எவரையும் ஷைத்தான் தீண்ட இயலாது அல்லாஹ் பாதுகாத்தான் என்பதை திருக்குர்ஆன் வசனங்கள்; மூலம் முன்னர் விளக்கினோம். எனவே உண்மையடியானின் ஆராய்ச்சிபடி கிருஸ்தவர்களுக்கு அந்த நபிமார்கள் அனைவரும் கடவுளாக ஆகிறார்கள். எனவே உண்மையடியான் வணங்கவேண்டிய கடவுள்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டிவிட்டது.

5. அல்லாஹ்வை ஈமான் கொண்ட இறைவிசுவாசிகளான நல்லடியார்களை ஷைத்தான் எதுவும் செய்ய இயலாது என்பதை திருக்குர்ஆன் வாயிலாக நாம் சுட்டிக்காட்டினோம். இந்த உலகத்தில் இதுவரை வாழ்ந்து மரணித்த, இனி வாழ இருக்கிற, இன்று வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய முஃமின்கள் அனைவரும் இறைவிசுவாசிகளே. எனவே உண்மையடியானின் ஆராய்ச்சிபடி இறைவிசுவாசிகளான கோடானுகோடி முஸ்லிம்கள் அனைவரும் கிருஸ்தவர்களுக்கு கடவுளாக ஆகிறார்கள். இப்படி உண்மையடியான் வணங்கவேண்டிய கடவுள்களின் எண்ணிக்கை பல ட்ரில்லியன்களைத்; தாண்டிவிட்டது.

6. அவ்வளவு ஏன்? ஏசு சிலுவையில் மரணித்து மனிதர்களின் பாவங்களை பரிசுத்தப்படுத்தினார் என்பதுதானே கிருஸ்தவர்களின் நம்பிக்கை. பரிசுத்தவான்கள் எல்லாம் கடவுள்கள் என்ற உண்மையடியானின் தத்ததுவத்தின்படி கிருஸ்தவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தாங்களே வணங்கிக்கொள்ள வேண்டும்.எப்படி இருக்கிறது கொடுமை.

அல்லாஹ்வின் சங்கைமிக்க திருத்தூதரான ஏசு என்ற நபி ஈஸா (அலை) அவர்களை கடவுள் என்று பொய்யுரைப்பதற்கு குர்ஆனையும் நபிமொழியையும் கையில் எடுத்ததால் உண்மையடியானுக்கு வந்த வினையைப் பார்த்தீர்களா? ஒரு கடவுளை உருவாக்கக் கனவுகண்ட இவருக்கு, பல பில்லியன், ட்ரில்லியன் கடவுள்கள் கிடைத்துள்ளன. இதை அறிந்து பெருமிதம் அடைந்தாலும் அடைவார் இந்த பொய்யடியான்.

குர்ஆன் அனைவரையும் கெட்டவர்கள் என்று கூறுகிறது என்ற பொய்யடியானின் பொய்க்கூற்றின் நிலையையும் தற்போது பார்ப்போம். குர்ஆன் தெளிவுபடுத்தும் அந்த வசனம் இதோ

திருக்குர்ஆனின் 9ம் அத்தியாயம் அத்தவ்பாவின் 28 வது வசனம்

9:28. ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக இணை வைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் சங்கை மிகுந்த இப் பள்ளியை (கஃபத்துல்லாஹ்வை) அவர்கள் நெருங்கக் கூடாது (அதனால் உங்களுக்கு) வறுமை வந்து விடுமோ என்று நீங்கள் பயந்தீர்களாயின் - அல்லாஹ் நாடினால் - அவன் அதி சீக்கிரம் அவன் தன் அருளால் உங்களைச் செல்வந்தர்களாக்கி விடுவான் - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்

மேற்கண்ட இறைவசனம் அல்லாஹ்வுக்கு இணைவைத்து வணங்குபவர்கள் அசுத்தமானவர்கள் என்று கூறுகிறது. சுருங்கச் சொல்லப்போனால்.

அன்னை மர்யம் (அலை), நபி ஈஸா (அலை), நபி முஹம்மது (ஸல்) மற்றும் செய்யிதினா உமர் (ரழி) போன்றோரை கிருஸ்தவர்களுக்கு கடவுளாக ஆக்கி, அல்லாஹ்வுக்கு இணைவைத்த உண்மையடியான் அசுத்தமானவர் என்கிறது.

தீர்க்கதரிசிகளாக அவதரித்த இறைத்தூதர்கள் அனைவரையும் கிருஸ்தவர்களுக்கு கடவுளாக ஆக்கி, அல்லாஹ்வுக்கு இணைவைத்த உண்மையடியான் அசுத்தமானவர் என்கிறது.

கோடானகோடி முஸ்லிம்கள் அனைவரையும் கிருஸ்தவர்களுக்கு கடவுளாக ஆக்கி, அல்லாஹ்வுக்கு இணைவைத்த உண்மையடியான் அசுத்தமானவர் என்கிறது.

இன்னும் கிருஸ்தவர்களையே கிருஸ்தவர்களுக்கு கடவுளாக ஆக்கி, அல்லாஹ்வுக்கு இணைவைத்த உண்மையடியான் அசுத்தமானவர் என்கிறது.

எனவே மேற்கண்ட வசனம் உண்மையடியான் போன்ற இணைவைப்பார்களை அசுத்தமானவர்கள் என்று கூறுகிறதே அல்லாமல் பொத்தாம் பொதுவாக அனைவரையும் கெட்டவர்கள் என்று கூறவில்லை.

பொய்யடியானின் பொய் கூற்று 5

//ஏசு சத்தியமான நியாய அதிபதி என்றும் முஸ்லிம்கள் நம்புகின்றனர். அவர் இவ்வுலகத்திற்கு திரும்பி வருவார் என்றும் குர்ஆன் கூறுகிறது. மனிதன் சத்தியமான நியாய அதிபதியாக முடியுமா? எனவே ஏசுதான் கடவுள்.//

நமது விளக்கம்:-

அன்பு நண்பர்களே! உலக முஸ்லிம்கள் அனைவரும் சத்தியமான நியாய அதிபதியாகவும், நியாயத்தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் படைத்த இறைவனை மட்டும்தான் நம்புகிறார்கள், நம்பவேண்டும். நபி ஈஸா (அலை) அவர்களை சத்தியமான நியாய அதிபதி என்றும் முஸ்லிம்கள் நம்புகின்றனர் என்ற கருத்து உண்மையடியானின் அறியாமையை உணர்த்துவது மட்டுமல்லாது, உலக முஸ்லிம்களுக்கெதிரான இவர் சுமத்தும் மாபெரும் அவதூறு ஆகும்.

நாங்கள் நபி ஈஸா (அலை) அவர்கள் இறுநாளில் அடையாளம் என்று நம்புகிறோம் (43:61). இறைவன் புறத்தில் உயர்த்தப்பட்ட அவர்கள் (4:157) இவ்வுலகம் அழிவதற்கு முன்பாக இறைவனால் பூமிக்கு அனுப்பப்படுவார்கள். மனிதனாக பிறந்த எவரும் இறந்தே ஆகவேண்டும் என்ற விதியின் படி, பூமிக்கு இறக்கப்படும் நபி ஈஸா (அலை) அவர்கள் இந்த பூமியிலேயே மரணிப்பார்கள் என்றும் நம்புகிறோம். இதுவல்லாமல் நபி ஈஸா (அலை) அவர்களை சத்தியமான நியாய அதிபதியாக எந்த முஸ்லிமும் சத்தியமாக நம்பவில்லை.

5:17 திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்ததையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். ''மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்'' என்று (நபியே!) நீர் கேளும்;. வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள பொருட்கள் அனைத்தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்;. அவன் நாடியதைப் படைக்கிறான்;. இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.

5:116 இன்னும், ''மர்யமுடைய மகன் ஈஸாவே, 'அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்' என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?'' என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், ''நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய், உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்;. நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்'' என்று அவர் கூறுவார்.

5:72 ''நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்'' என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்;. ஆனால் மஸீஹ் கூறினார்; ''இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்'' என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.

9:30. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் எள்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும். இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?

61:6. மேலும், மர்யமின் குமாரர் ஈஸா, ''இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹமது' என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்'' என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் ''இது தெளிவான சூனியமாகும்'' என்று கூறினார்கள்.

43:64. நிச்சயமாக, அல்லாஹ்தான் எனக்கும் இறைவன், உங்களுக்கும் இறைவன். ஆகவே அவனையே வணங்குங்கள், இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி).

நபி ஈஸா (அலை) அவர்களைப் பற்றி வல்ல இறைவன் கூறுவதையும், கிருஸ்தவர்களுக்கு எதிரான நபி ஈஸா (அலை)அவர்களின் வாக்குமூலத்தையும், நபி (ஸல்) அவர்களைப் பற்றி முன்னறிவிப்பு செய்ததையும் விளக்கும் மேற்கூறிய திருக்குர்ஆன் வசனங்களை உண்மையடியான் வகையறாக்கள் படித்து புத்தியுடன் நடந்து கொள்ளட்டும். இனியேனும் குர்ஆன் அப்படி சொல்கிறது, ஹதீஸ் இப்படி சொல்கிறது என்று எதைஎதையோ உளறிக் கொட்டிவிட்டு முஸ்லிம்லிம்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளாமல் இருப்பார்களாக.

No comments: