அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, July 6, 2009

மகன்களுடன் தற்கொலை செய்ய நீதிபதியிடம் அனுமதி கோரிய பெண்

ஜபல்பூர்: மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்தவர் மெலாக்கா அலி. இவரது கணவர் மெஹ்பூத் அலி, தற்போது சிறையில் உள்ளார். இரண்டு ஆண் குழந்தைகளுடன் வசித்து வரும் மெலாக்காவை போலீசார் கொடுமைப்படுத்துவதாகவும், இரவு நேரங்களில் தனது இளைய மகனின் இருப்பிடத்தை கேட்டு தொல்லை கொடுப் பதாக கூறி, மெலாக்கா, ம.பி., ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் மனு அளித் துள் ளார்.

உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த பலனும் ஏற்படாததால், இரண்டு மகன்களுடன் தற்கொலை செய்து கொள்ள ஐகோர்ட் அனுமதி வழங்க வேண்டும் எனவும் மெலாக்கா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மெலாக்காவின் மனுவை நீதிபதிகள் ரிட் மனுவாக ஏற்றுக்கொண்டு அரசு வக்கீலுக்கு, ஐகோர்ட் பதிவாளர் மூலம் நோட் டீஸ் அனுப்பி விளக்கம் கேட் கப்பட்டுள்ளது.




No comments: