அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, November 24, 2009

சோனி-எரிக்ஸன் நிறுவனம் மூடப்பட்டது! 2000 பேர் வேலை இழப்பு!


சென்னையிலுள்ள சோனி எரிக்சன் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால் அந்நிறுவனம் உடனடியாக மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் பணிபுரியும் 2000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

செல்போன் தயாரிப்பில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சோனி எரிக்சன் என்ற செல்போன் நிறுவனம் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஜப்பான், சுவீடன், ஆலந்து, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா போன்ற பல நாடுகளில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இதன் அலுவலகங்கள் உள்ளன. சென்னை அருகில் உள்ள மணப்பாக்கத்தில் சோனி எரிக்சனின் சாஃப்ட்வேர் எனப்படும் மென் பொருள் மேம்பாட்டு மையம் 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு புதிய மொபைல் போன்களை வடிவமைக்கும் பணி நடந்தது. சமீபத்தில் வெளியான செல்போன்கள் இங்கு தான் வடிவமைக்கப்பட்டது.

இந்நிலையில் சர்வதேச அளவில் சோனி எரிக்சன் நிறுவனம் விற்பனையில் பெரும் சரிவை சந்தித்தது. இதன் காரணமாக பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சோனி எரிக்சனின் புதிய தலைவராக பொறுப்பேற்றவர் உலகம் முழுவதும் உள்ள கிளைகளின் செயல் பாட்டை ஆராய்ந்தார். அவர் அனுப்பிய பிரதிநிதிகள் சென்னை வந்து அந்நிறுவன ஊழியர்களுடன் ஆலோசனை நடத்தினர். இதில் சென்னை நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால் இம்மையத்தை உடனடியாக மூடுவதாக அறிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு அங்கு பணிபுரிந்து வந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மணப்பாக்கத்தில் சோனி எரிக்சனின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அலுவலகமும் மூடப்படுகிறது.

சென்னை அலுவலகம் மூடப்பட்டதன் மூலம் 60 ஊழியர்கள் உடனடியாக வேலை இழந்தனர். 2010-ம் ஆண்டு வாக்கில் 2ஆயிரம் ஊழியர்கள் வேலை இழப்பார்கள் எனத்தெரிகிறது.

No comments: