அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, February 6, 2009

கீழக்கரையில் தரமற்ற சாலைகள்

கீழக்கரை,பிப்.6: கீழக்கரை யில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
கீழக்கரை பகுதியில் சாலைகள் குண்டும், குழியுமாக படுமோசமாக காணப்படுகின்றன. புதி தாக சாலை அமைத்து இரண்டு ஆண்டுகளி லேயே பள்ளங்களாக மாறியுள்ளன. சாலை அமைவதற்கு முன்பு சாலையின் தன்மை, அளவு, ஒதுக்கீட்டு தொகை குறித்து அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் அறிவிப்பு பலகை ஏதும் வைக்கப்படுவதில்லை. இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் குமரன் கூறும்போது, Ôபோட்ட இடத்திலேயே மீண்டும் மீண்டும் சாலை கள் போடப்படுகின்றன. பெயரளவில் தான் தார் சாலைகள் அமைக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பயனடையாமல் போவதுடன் அரசு பணமும் விரயமாகிறதுÕ என்றார்.

No comments: