அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, August 8, 2011

சிறையில் எழுதிய புத்தங்களை வெளியிட உதவ வேண்டும் பாக். தீவிரவாதி கோரிக்கை

காஜியாபாத்: தான் எழுதிய புத்தகங்களை வெளியிட பாகிஸ்தான் உதவ வேண்டும் என்று சிறையில் உள்ள தீவிரவாதி கோரிக்கை விடுத்துள்ளான்.
காஜியாபாத் அருகே உள்ள மோடி நகரில் கடந்த 1996ம் ஆண்டு குண்டு வெடிப்பு நடந்தது. இந்த சம் பவம் தொடர்பாக ஹர்கத் உட் அன்சார் என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த பாக். தீவிரவாதி அப்துல் மாடின்னை, காஷ்மீரில் 1997ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர். இவனுக்கு ராஜஸ்தானில் நடந்த தீவிரவாதச் செயலுக்கு உள்ள தொடர்பு நிருபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2008ம் ஆண்டு விடுதலையான மாடின்னை மோடி நகர் குண்டு வெடிப்புக்காக போலீசார் கைது செய்து, தாஸ்னா சிறையில் அடைத்தனர். சிறையில் உள்ள அப்துல் மாடின், தீவிரவாதம் பற்றி 2 புத்தங்களை எழுதியுள்ளான். இந்த புத்தங்களை வெளியிட அனுமதி கோரி காஜியாபாத் நீதிமன்றத்தில் மாடின் மனு தாக்கல் செய்தான். அவனது மனுவை நீதிபதி நிராகரித்துவிட்டார். இதையடுத்து, பாகிஸ்தான் அரசுக்கு மாடின் எழுதியுள்ள கடிதத்தில், இந்த விஷயத்தில் தலையிட்டு, புத்தகங்களை வெளியிட பாகிஸ்தான் தூதரகம் உதவ உத்தரவிட வேண்டும் என்ற கோரியுள்ளதாக மாடின் வக்கீல் அவத் குமார் தியாகி தெரிவித்தார். 

No comments: