அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, August 8, 2011

சுப்ரமணியசாமி வீடு மீது தாக்குதல்!

டெல்லியில் உள்ள ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி வீடு ஞாயிற்றுக் கிழமை மாலையில் தாக்கப்பட்டது.  அந்த வீட்டுக்குள்  சுமார் 15 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அதிரடியாக புகுந்து கற்களை வீசித் தாக்கியது.

அதில் சிலர்,  வீட்டின் சுவரில்  ஏறிக்குதித்து உள்ளே சென்று தோட்டத்தில் இருந்த மலர் தொட்டிகளை உடைத்தனர். மேலும், சுப்பிரமணிய சாமிக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினர்.
 

சம்பவம்  நடந்தபோது, வீட்டில் சுப்பிரமணிய சாமி இல்லை. அவருடைய பேத்தி மட்டுமே இருந்தார். தாக்குதல் நடத்திய அந்த மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

No comments: