அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, December 31, 2008

இந்துப் பயங்கரவாதிகள் இருந்தால், நான் மகிழ்ச்சி அடைகிறேன். பால்தாக்கரே.

இந்துப் பயங்கரவாதிகள் இருந்தால், நான் மகிழ்ச்சி அடைகிறேன். பால்தாக்கரே.

இசுலாமியர்களுக்கு எதிராக ஏதாவது நிச்சயம் செய்தாக வேண்டும் என்கிறார்.
இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் செய்த தவறு என்ன எனவும் வினா தொடுக்கிறார்.

காங்கிரசு ஆட்சி நடவடிக்கை எடுக்குமா?

இந்துத்வப் பயங்கரவாதம் மாலேகானில் நடத்திய வன்முறை வெறியாட்டத்தை அனைவரும் கண்டித்துக் கொண்டிருக்கும் வேளையில், மகாராட்டிராவின் மதவெறி இயக்கமான சிவசேனா அமைப்பு அதனை வரவேற்றுள்ளது.

அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவுக்கு அக்கட்சியின் தலைவர் பால்தாக்கரே பேட்டி அளித்துள்ளார். செப்டம்பர் 29-இல் மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பு களுக்குப் பின்னால், இந்துப் பயங்கரவாதிகள் இருந்தால், நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று நேர்காணலில் கூறியுள்ளார்.

இந்துக்களில் பயங்கரவாதிகள் பிறக்க வேண்டும் என்கிற தன் ஆசையையும் தெரிவித்துள்ளார். இசுலாமியர்களுக்கு எதிராக ஏதாவது நிச்சயம் செய்தாக வேண்டும் என்கிறார். இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் செய்த தவறு என்ன எனவும் வினா தொடுக்கிறார்.

பயங்கரவாதத்தை ஆதரித்துப் பேசும் அவர்மீது மகாராட்டிர காங்கிரசு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

No comments: