அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, June 24, 2011

சாய் பாபாவின் அறையினுள் 98 கிலோ தங்கம், 12 கோடி பணம்

புட்டபர்த்தி : புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் உள்ள சமீபத்தில் இறந்து போன சாய்பாபாவின் தனி அறையான யஜுர் மந்திர் அவரின் மறைவுக்கு பிறகு முதல் முறையாக திறக்கப்பட்டதில் 12 கோடி பணமும் 98 கிலோ தங்கமும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


பாபா டிரஸ்டின் உறுப்பினரும் பாபாவின் உறவினருமான ரத்னாகர் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசும் போது பாபாவின் மறைவுக்கு பிறகு யஜுர் மந்திர் திறக்கப்பட்ட போது மொத்தம் 11 கோடியே 56 இலட்சமும் 98 கிலோ தங்கமும் கண்டெடுக்கப்பட்டதாக கூறினார்.
டிரஸ்ட் உறுப்பினர்கள் முன்னிலையில் பாபாவின் 15 உறுப்பினர்களும் சில ஸ்டேட் போர்டு ஆப் இந்தியா ஊழியர்களும் இச்சொத்தை எண்ணியதாக கூறிய ரத்னாகர் பாபாவின் உயில் ஏதும் காணப்படவில்லை என்றும் தெரிவித்தார். பாபாவின் தனி உதவியாளர் சத்யஜித் இந்த டிரஸ்டில் சேர பாபா விரும்பியதாக பேச்சு உள்ளது குறிப்பிடத்தகது. பாபாவின் டிரஸ்டுக்கு புட்டபர்த்தி போல் பெங்களூர், ஹைதரபாத் மற்றும் பல ஊர்களில் சொத்துகள் உள்ளது.

No comments: