அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, June 25, 2011

டோனியின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பிய காசோலை!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி ராஞ்சியில் உள்ள தனது வீட்டுக்கு வரி செலுத்துவதற்காக ராஞ்சி மாநகராட்சிக்குக் கடந்த மார்ச் மாதம் ரூ 645 க்குக் காசோலை அளித்துள்ளார்.
இந்தக் காசோலையை ராஞ்சி மாநகராட்சி கலெக்சனுக்காக வங்கியில் போட்டுள்ள நிலையில் டோனியின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என இந்தக் காசோலை திரும்பியுள்ளது. விளையாட்டு, விளம்பரம் என கோடிகளில் சம்பளம் வாங்கும் டோனியின் வங்கிக் கணக்கில் ரூ 645 இருப்பு இல்லாமல் காசோலை திரும்பியுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த அதிகாரிகள், "டோனி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமான வரி கட்டி வருவதால் காசோலை பணம் இல்லாமல் ரிட்டன் ஆனதற்காக அபராதம் எதுவும் விதிக்கப் போவதில்லை" என்று கூறியுள்ளனர்.

No comments: