அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, June 24, 2011

கனிமொழி சிறையில் கொப்புளங்களுடன் கஷ்டப் படுகிறார் - கருணாநிதி!

டெல்லி திகார் சிறையில் மகள் கனிமொழியைச் சந்தித்த பின்னர் சென்னை திரும்பிய திமுக தலைவர் கருணாநிதி நேற்று இரவு சி.ஐ.டி காலனி வீட்டில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். 

டெல்லி திகார் சிறையில் உள்ள மகள் கனிமொழி, ராசா மற்றும் சரத் குமார் ஆகியோரைப் பார்ப்பதற்காக மட்டுமே டெல்லி சென்றதாகவும் மனிதத் தன்மையற்ற இடத்தில் கனிமொழி அடைக்க ப்பட்டு இருப்பதாகவும் கருணாநிதி தெரிவித்தார்.

கனிமொழி சிறையில் கொப்புளங்களுடன் கஷ்டப் படுவதாகவும், பத்திரிக்கைகளில் வெளியான தவறான செய்திகளின் அடிப்படையில் கனிமொழி மீது குற்றச்சாட்டுகள் கூறப் பட்டுள்ளதாகவும் சி.பி.ஐ யும் அந்த பொய்யான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கருணாநிதி தெரிவித்தார்.

No comments: