அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, July 3, 2011

தயாநிதிமாறனை பதவி நீக்கக்கோரி பாஜக போராட்டம் அறிவிப்பு ..

நாட்டையே உலுக்கிய 2G அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழலுக்குக் காரணமான அமைச்சர் தயாநிதி மாறன் பதவி விலககோரி போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.இது தொடர்பாக பா.ஜ.க செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:


2G விவகாரத்தில் முன்னாள் மத்திய மந்திரி ராசா தொடர்பாக மவுனம் சாதித்து அவருக்கு நற்சான்றிதழ்  அளித்ததன் காரணமாக ஏற்பட்ட தலைகுனிவை பிரதமர் மன்மோகன்சிங் மறந்திருக்க மாட்டார். அதே தவறு தயாநிதி மாறன் விவகாரத்திலும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை முறைகேடாக ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் தயாநிதி மாறனுக்குள்ள தொடர்பு குறித்து சி.பி.ஐ. அளித்துள்ள ஆவணங்களின்  அடிப்படையில் மத்திய மந்திரி பதவியிலிருந்து தயாநிதி மாறனை நீக்க வேண்டும்.

இதை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டத்தை பா.ஜனதா சார்பில் நடத்தப்படும்.ஆகஸ்டு 1-ஆம்தேதி தொடங்க உள்ள பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் உரிய முறையில் பாராளுமன்றத்தின் இருசபைகளிலும் இந்த விவகாரத்தை எழுப்பி அவரை பதவியில் இருந்து நீக்கும்வரை போராட முடிவு செய்துள்ளோம்" என்று ரவிசங்கர் தெரிவித்தார்.

No comments: