அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, July 9, 2011

அரசுக்கு சொந்தமான புதையலை கொள்ளையடிக்க திட்டமா?


 திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் எடுக்கப்பட்ட பொக்கிஷங்கள் அனைத்தும் திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜயேந்திரர் தெரிவித்துள்ளார். 

"நீண்ட காலமாக பத்மநாப சுவாமி கோயிலின் பாதுகாவலர்களாக திருவாங்கூர் மன்னர் குடும்பம் தான் இருந்து வந்துள்ளது. அந்த கோயிலுக்காகவே அவர்களது ஆட்சி அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்துள்ளது. தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள அனைத்து நகைகளும் ஆபரணங்களும் கோயிலுக்கு திருவாங்கூர் மன்னர்களால் அளிக்கப்பட்டது தான். 

எனவே, அவை அனைத்தும் மன்னர் குடும்பத்தினருக்கே சொந்தமானது. எனினும், அந்த பொக்கிஷங்கள் அனைத்தும் கோயிலிலேயே வைக்கப்பட வேண்டும்." என்று ஜயேந்திரர் கூறினார். பல நூற்றாண்டுகளாக மூடி வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலின் ரகசிய அறைகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி திறக்கப்பட்டது. இதில், இதுவரை சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் காசுகள், நகைகள், வைரங்கள் உள்ளிட்ட ஆபரணங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 

விரைவில் மேலும் ஒரு அறை திறக்கப்பட உள்ளது. அதன் கதவு மற்றதை விட மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளதால், அதில் விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் பெருமளவில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு சொந்தமான அறக்கட்டளை மூலம் பத்மநாப சுவாமி கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 கொலை குற்றவாளி, பெண் பித்தர் சங்கராசாரியார் ரொம்ப காலங்களுக்கு பிறகு இப்படி திருவாய் மலர்ந்துள்ளார். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அது போல் தங்கள் பார்பன உயர்ஜாதியை சேர்ந்த திருவாங்கூர் மன்னரின் குடும்ப சொத்தாக இந்த புதையலை மாற்ற திட்டம் வகுத்து செயல்படுகிறார் சங்கராசாரி.

சங்கர மடத்தை தன் கைகளில் வைத்து கொண்டு பிராமணர்கள் மட்டும் அதன் சொத்துக்களை அனுபவித்து வருகிறார்களோ அது மாதிரி கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட புதையலையும் பறிக்க நினைக்கின்றனர். அதானால்தான் இந்த சங்கராச்சாரி இப்படி திருவாய் மலர்ந்துள்ளார். 

"கண்டெடுக்கப்படும் புதையல்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தம்" என்ற சட்டம் இதற்கும் பொருந்தும். ஆகவே இது அரசுக்கு சொந்தமானது தான் இதில் யாதொரு சந்தேகமும் இல்லை. இதை அமுக்க பார்க்கும் பார்ப்பன கழுகுகளிடம் இருந்து அரசு தன்வசப்படுத்தி மக்கள் பணிகளுக்கு செலவிட வேண்டும்.

No comments: