அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, July 3, 2011

அழகிரி, மம்தா மோசமான அமைச்சர்கள் ...

புது தில்லி : ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் உள்ள கேபினட் மந்திரிகளின் ஆலோசனை கூட்டம் நாட்டை பாதிக்கும் முக்கிய பிரச்னைகள், துறை சார்ந்த பிரச்னைகள் போன்றவற்றிக்காக கூடும். இத்தகைய மத்திய மந்திரிசபையின் கேபினட் கூட்டங்களில் மிக குறைவாக வருகை தந்த மத்திய அமைச்சர்கள் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியும் ஆவார்கள் என தெரிய வந்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக சேவகர் சுபாஷ் அகர்வால் இது குறித்து சேகரித்த தகவல்களின் அடிப்படையில் மத்திய மந்திரிசபையின் கூட்டங்களில் பெரும்பாலும் காங்கிரஸை சார்ந்த அமைச்சர்கள் தவறாமல் கலந்து கொள்வதாகவும் கூட்டணி கட்சிகளை சார்ந்த அமைச்சர்களோ அசட்டையாக இருந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங், ராணுவ அமைச்சர் அந்தோனி, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி போன்றோர் அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்று உள்ளனர். அமைச்சர்கள் சிதம்பரம் மற்றும் கபில்சிபல் போன்றோரும் கிட்டத்தட்ட அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்று உள்ளனர். மற்ற காங்கிரஸ் அமைச்சர்களும் கிட்டத்தட்ட ஒப்பு கொள்ளும் அளவு கூட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.
ஆனால் கூட்டணியை சார்ந்த அமைச்சர்களோ இவ்விஷயத்தில் பொறுப்புணர்ச்சி அற்றவர்களாய் நடந்து கொண்டு உள்ளார்கள். 2010 – 2011 நிதி ஆண்டில் நடைபெற்ற 48 கூட்டங்களில் மம்தா பானர்ஜி வெறும் 6 கூட்டங்களில் மாத்திரம் பங்கேற்று உள்ளார். அழகிரியோ 40 கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் வெறும் 8 கூட்டங்களில் பங்கேற்று உள்ளார்.
புது தில்லி : ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் உள்ள கேபினட் மந்திரிகளின் ஆலோசனை கூட்டம் நாட்டை பாதிக்கும் முக்கிய பிரச்னைகள், துறை சார்ந்த பிரச்னைகள் போன்றவற்றிக்காக கூடும். இத்தகைய மத்திய மந்திரிசபையின் கேபினட் கூட்டங்களில் மிக குறைவாக வருகை தந்த மத்திய அமைச்சர்கள் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியும் ஆவார்கள் என தெரிய வந்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக சேவகர் சுபாஷ் அகர்வால் இது குறித்து சேகரித்த தகவல்களின் அடிப்படையில் மத்திய மந்திரிசபையின் கூட்டங்களில் பெரும்பாலும் காங்கிரஸை சார்ந்த அமைச்சர்கள் தவறாமல் கலந்து கொள்வதாகவும் கூட்டணி கட்சிகளை சார்ந்த அமைச்சர்களோ அசட்டையாக இருந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங், ராணுவ அமைச்சர் அந்தோனி, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி போன்றோர் அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்று உள்ளனர். அமைச்சர்கள் சிதம்பரம் மற்றும் கபில்சிபல் போன்றோரும் கிட்டத்தட்ட அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்று உள்ளனர். மற்ற காங்கிரஸ் அமைச்சர்களும் கிட்டத்தட்ட ஒப்பு கொள்ளும் அளவு கூட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.
ஆனால் கூட்டணியை சார்ந்த அமைச்சர்களோ இவ்விஷயத்தில் பொறுப்புணர்ச்சி அற்றவர்களாய் நடந்து கொண்டு உள்ளார்கள். 2010 – 2011 நிதி ஆண்டில் நடைபெற்ற 48 கூட்டங்களில் மம்தா பானர்ஜி வெறும் 6 கூட்டங்களில் மாத்திரம் பங்கேற்று உள்ளார். அழகிரியோ 40 கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் வெறும் 8 கூட்டங்களில் பங்கேற்று உள்ளார்.

No comments: