அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, January 16, 2009

இஸ்ரேல் தூதகரம் முன் மார்க்சிஸ்ட் போராட்டம்

இஸ்ரேல் தூதகரம் முன் மார்க்சிஸ்ட் போராட்டம்

புதுதில்லி, டிச.30 காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலைக் கண்டித்து தில்லியில் உள்ள அந்நாட்டு தூதரகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

அக்கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.

அப்போது அவர் பேசுகையில், ''இஸ்ரேல் மீதான தாக்குதலைக் இந்திய அரசு கண்டிக்கவில்லை. அரசு சார்ந்த தீவிரவாதத்தில் நம்பிக்கையுள்ள நாட்டுடன் தொடர்பு வைத்திருப்பது சர்வதேச அரங்கில் இந்திய நலனுக்கு எதிரான செயலாகும்'' என்றார்.

''இதனால் சுதந்திரமான நமது வெளியுறவுக் கொள்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கையை இந்தியா கண்டிக்க வேண்டும் என்று மேற்காசிய நாடுகள் விரும்புகின்றன'' என்றும் பிருந்தா காரத் குறிப்பிட்டார்.

No comments: