அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, February 28, 2009

அந்தரத்தில் பறக்கும் போலிச் சாமியார்!

வீடியோவில் ஒரு போலிச்சாமியார் அந்தரத்தில் பறப்பது போல தத்ரூபமாக நடித்து மக்களை எப்படி ஏமாற்றுகிறார் என்று பாருங்கள்..........

அந்தக் காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் தங்கள் தவ வலிமையாலும், சிறந்த பக்தியாலும், ஒழுக்க நெறி தவறா வாழ்வினாலும் , பல்வேறு அதிசய சக்திகளைப் பெற்று வாழ்ந்தனர் என்று நாம் கேள்விப் பட்டிருக்கிறோம்.

தவ வலிமை படைத்த யோகிகள் வாழ்ந்த அந்தக் காலத்திலேயே இவர்களைப் போன்ற போலிகளும் வலம் வந்திருக்கின்றனர்,

அந்தக் காலத்திலேயே போலிகள் இருந்தனர் என்றால் இந்தக் கலிகாலத்தில் கேட்கவா வேண்டும், எனவே நாம்தான் கவனமாக இருந்து உண்மையையும் போலியையும் கண்டு கொள்ள வேண்டும்.

இன்று பல சுயநலவாதிகள் தாங்கள் தவ வலிமை படைத்த முனிவர்கள் என்று கூறிக் கொண்டு பக்தி மான்கள் வேடத்தில் பல ஏமாற்று வேலைகளை செய்து வருகின்றனர்.

மக்களும் பல நேரங்களில் கடவுள் நம்பிக்கை என்ற பெயரால் இப்படிப்பட்ட ஏமாற்றுப் பேர்வழிகளிடம் சென்று ஏமாந்து விடுகின்றனர்ர்,

கடவுளைத் தொடர்பு கொள்ள இது போன்ற போலி முகவர்களை மக்கள் தேடுவதுதான் இவர்களைப் போன்ற போலிகளுக்கு வசதியாகப் போய்விடுகிறது.

இந்தப் போலிகளின் முகத்திரையைக் கிழிக்கிறார் இவர்,

பாருங்கள் வீடியோவை.....



video

இன்று நம் நாட்டில் உண்மையான யோகிகள் யார்? நாட்டில் உலவும் போலிகள் யார் ? என்பதை மக்கள் சரியாக இனம் கண்டு கொண்டால் ஏமாற்றங்கள் அடையாமல் தவிர்க்கலாம்.

சித்தர்களுக்கும் எத்தர்களுக்கும் வித்தியாசம் கண்டு ஏமாறாமல் இருக்க வேண்டியது மக்கள்தான்............ ....

No comments: