அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, January 16, 2009

பக்கத்து வீட்டு பெண்ணை போலீசில் சிக்க வைக்க 11/2 வயது மகளை கல்லால் அடித்து

பக்கத்து வீட்டு பெண்ணை போலீசில் சிக்க வைக்க 11/2 வயது மகளை கல்லால் அடித்து
கொன்ற கொடூர தந்தை மனைவி காட்டி கொடுத்தார்


மதுரை, ஜன.16-

மதுரையில் பக்கத்து வீட்டு பெண்ணை போலீசில் சிக்க வைக்க தனது 11/2 வயது மகளை கல்லால் அடித்து கொன்ற கொடூர தந்தையை, அவரது மனைவி காட்டி கொடுத்தார்.

பெண் குழந்தை

மதுரை வரிச்சிïரை சேர்ந்தவர் அய்யனார். அவரது மனைவி மலையரசி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 11/2 ஆண்டுகளுக்கு முன்பு 3-வது பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு அவர்கள் தர்ஷினி என்று பெயர் வைத்தனர். தனக்கு பிறந்த 3 குழந்தைகளும் பெண் குழந்தைகளாக இருப்பதால் அய்யனார் மிகவும் மனவருத்தம் அடைந்ததாக கூறப்படுகிறது.

அதனால் அவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தொடர்ந்து தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் அய்யனாருக்கும், அவரது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் லட்சுமி என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக இடத்தகராறு இருந்து வந்தது. கடந்த 13-ந் தேதி இரு வீட்டாருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அய்யனார் எப்படியாவது லட்சுமியை போலீசில் சிக்க வைக்க முடிவு செய்தார்.

கல்லால் அடித்து கொலை

இதற்காக தான் பெற்று வளர்த்த 11/2 வயது பச்சிளம் குழந்தை தர்ஷினியை யாருக்கும் தெரியாமல் தனது வீட்டில் வைத்து கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்தார். பின்னர் இந்த கொலைப்பழியை லட்சுமியின் மீது சுமத்துவதற்காக குழந்தையின் பிணத்தையும், கல்லையும் யாருக்கும் தெரியாமல் லட்சுமியின் வீட்டின் முன்பாக போட்டுவிட்டு தலைமறைவானார். அடுத்தநாள் காலை கதவை திறந்து பார்த்த லட்சுமி, தனது வீட்டு முன்பு குழந்தை தர்ஷினி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்த நிலையில் மலையரசி, தனது மகள் இறந்தது குறித்தும், கணவர் தலைமறைவானது குறித்தும் கருப்பாïரணி போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அய்யனாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

குழந்தையின் தந்தையே அதனை கல்லால் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments: