அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, January 21, 2009

மெரினா கடலில் குளித்த 3 பேர் பலி

மெரினா கடலில் குளித்த 3 பேர் பலி


சென்னை, ஜன.21-

சூளைமேட்டை சேர்ந்தவர் முகமது ரியாஸ் (வயது 24). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு வந்தார். பின்னர் அவர் மெரினா கடலில் இறங்கி குளித்தார். அப்போது பெரிய அலை ஒன்று அவரை கடலுக்குள் இழுத்து சென்றது.

அலையில் சிக்கிய அவரை மீட்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று மதியம் அவரது உடல், பட்டினப்பாக்கம் அருகே கரை ஒதுங்கியது. அதே போல் கடலில் குளித்து பலியான மேற்கு மாம்பலத்தை சேர்ந்த பார்த்திபன்(18) என்பவரது உடலும், சுமார் 30 வயது மதிக்க வாலிபர் ஒருவரின் உடலும் நேற்று கரை ஒதுங்கியது.

இது தொடர்பாக மெரினா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments: