அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, January 20, 2009

வத்தலகுண்டு பெரிய பள்ளிவாசல் தலைவருக்கு வக்ஃப் வாரியம் நோட்டீஸ்

வத்தலகுண்டு பெரிய பள்ளிவாசல் தலைவருக்கு வக்ஃப் வாரியம் நோட்டீஸ்


வத்தலகுண்டு, ஜன. 18: திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பெரிய பள்ளிவாசல் தலைவருக்கு காரணம் கேட்டு வக்ஃப் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வத்தலகுண்டு பெரிய பள்ளிவாசலின் தலைவர் முகமது மன்சூர். இவர் மீது பல்வேறு புகார்கள் கூறி, வத்தலகுண்டைச் சேர்ந்த மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அகமது சல்மான், சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 மாதங்களுக்கு முன்பு வழக்குத் தொடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 1.12.2008 அன்று உத்தரவிட்டிருந்தது. அதில், தமிழ்நாடு வக்ஃப் வாரியம் முகமது மன்சூருக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி விசாரணை செய்து, அதன் அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 8 வாரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

அதன்படி, தமிழ்நாடு வக்ஃப் வாரியம், வத்தலகுண்டு பெரிய பள்ளிவாசல் தலைவர் முகமது மன்சூருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீஸில், முகமது மன்சூர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு, அதற்குரிய விளக்கத்தை 4 வாரத்துக்குள் அவர் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments: