அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, January 20, 2009

வளைகுடா யுத்தமும் இஸ்ரேலும்

வளைகுடா யுத்தமும் இஸ்ரேலும்

ஈராக் குவைத்தை அபகரித்து தனது மாநிலங்களில் ஒன்றாக அதை மாற்றியதால் வந்தது வளைகுடா யுத்தம். கொடுங்கோலன் சதாம் அமெரிக்கா தன்னை தாக்கினால் தனது தாக்குதல் இஸ்ரேல் மீதுதான் என்பதை தெளிவுபடுத்தினான். அதில் ஒரு சூட்சுமம் உள்ளது. இஸ்ரேலை அவன் தாக்கினால் அது ஈராக்கை செருப்பால் அடிக்கும். அதை காரணம் காட்டி மற்ற அரபு தேசத்தினர் அமெரிக்காவுக்கு துணை போக மாட்டார்கள் என்பது அவன் கணக்கு. அதில் விஷயம் இல்லாமல் இல்லை.

மற்ற நாடுகள் (இந்தியா உட்பட, அஹிம்சாவாதம்?) இந்த விஷயத்தில் எப்படியிருந்தாலும் இஸ்ரேலை சீண்டிய அண்டை நாடுகள் உதை வாங்காமல் இருந்ததில்லை. 1976-ல் யூத பயணக் கைதிகளை உகாண்டா எண்டெப்பெ விமான நிலையத்திலிருந்து அது மீட்டு வந்தது தீவிரவாதத்திற்கு எதிராக கொடுத்த பலமான அடியாகும். 1982-ல் லெபனானிலிருந்து தொல்லை கொடுத்த பாலஸ்தீன தீவிரவாதிகளை பெல்ட் அடி கொடுத்து அங்கிருந்து விரட்டியதை யாரால் மறந்திருக்க முடியும்?

ஆக இந்த விஷயத்தில் அமெரிக்கா ஏகத்துக்கு கவலைப்பட்டது. இஸ்ரேலிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, அப்படியே ஏதேனும் தாக்குதல்கள் வந்தாலும் எதிர்வினை செய்ய வேண்டாம் என கேட்டு கொண்டது. இஸ்ரேலின் பாதுகாப்புக்குக்கு முழுபொறுப்பு ஏற்று கொண்டது. சொன்னதுபோலவே பாதுகாப்பும் பேட்ரியாட் ஏவுகணைகள் ரூபத்தில் கொடுத்தது. சதாமின் கணக்கு பொய்த்தது. இஸ்ரேலை சாக்காக வைத்து அரபு நாடுகளின் ஆதரவை பெற இயலவில்லை. இன்று குவைத் நாளை நாம் என்ற பயத்திலேயே அவை அமெரிக்காவுக்கு ஆதரவு அளித்தன. பிறகு நடந்தது எல்லோருக்கும் தெரியும்.

இப்போது இஸ்ரேலுக்கு வருகிறேன். அது எப்போதுமே தனது பாதுகாப்பை தானே பார்த்து கொள்ளும். ஆனாலும் இம்முறை மிக கஷ்டப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டது. ஆனாலும் யுத்தத்தில் மறைமுகமாக பல உதவிகள் செய்தது. உதாரணத்துக்கு:

· அப்பிராந்தியத்திலேயே இஸ்ரேலிய படை மட்டுமே ஈராக்கிய படையை வெற்றிகரமாக சமாளித்திருக்க முடியும். இந்த எண்ணமும் சதாம் மற்ற தேசங்களை ஆக்கிரமிப்பதிலிருந்து தடுத்தது.

· ஈராக்கிய படைகள் ஜோர்டானுக்குள் நுழைந்தால் தனது போர் நடவடிக்கையை தொடங்கும் என்ற எச்சரிக்கையால் ஜோர்டான் தப்பித்தது.

· அமெரிக்கா இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட Have Nap வான் ஏவுகணைகளை தனது B­52 விமானங்களில் பொருத்தி கொண்டது. அமெரிக்க கடற்படையும் இஸ்ரேலின் பயனீயர் விமான ஒட்டி இல்லாத drones வானூர்திகளை வேவு வேலைக்கு பயன்படுத்தியது.

· இஸ்ரேலின் கண்ணிவெடி நீக்கும் கலப்பைகளை உபயோகித்தது அமெரிக்கா.

· இஸ்ரேலின் கணினி தொழில்நுட்பம் அளித்த ஆலோசனையின்படி பேட்ரியாட் ஏவுகணைகளின் மென்பொருளில் தகுந்த மாற்றங்கள் செய்யப்பட்டன.

· இஸ்ரேலிய விமான தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்ட எரிபொருள் டேங்குகள் மூலம் F­15 விமானங்களின் வீச்சை அதிகரிக்க முடிந்தது.

· எல்லாவற்றையும் விட முக்கியமாக இஸ்ரேல் 1981-லேயே ஈராக்கின் அணு ஆராய்ச்சி நிலையத்தை அழித்ததால் பத்து ஆண்டுகள் கழித்து அமெரிக்காவும் நேச நாடுகளும் ஈராக்கை தாக்கியபோது அது அணுசக்தி உள்ள நாடாக இல்லை. 1981-ல் இஸ்ரேலை இதற்காக குறை கூறிய பலநாடுகள் நிம்மதி பெருமூச்சு விட்டன.


இன்னும் கூறிக் கொண்டே போகலாம். தேவையானால் இந்த உரலுக்கு செல்லவும்.

இப்போது பதிவின் கருப்பொருளுக்கு வருகிறேன். நேரடி நடவடிக்கைகளை எடுக்காது அடக்கிவாசிப்பதும் ஒரு போர் யுக்தியே. ஆனால் இதுதான் மிகக்கடினம். என்ன செய்வது, பலன் வேண்டுமானால் அதையும் செய்ய வேண்டும்.

அன்புடன்,
azar.j.

No comments: