அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, January 20, 2009

ஞாநிக்கும் அப்பால்

ஞாநிக்கும் அப்பால்

தனது பார்ப்பன வேர்களை மறுத்து இயங்கிவரும் ஞாநியைக் கூட விட்டுவைக்காமல் அவர் தங்களது புனித பிம்பத்தை குலைத்தார் என நினைத்த சில அரைகுறை கேசுகள் ஞாநியின் பாப்பார புத்தி, பனியனுக்குள் நெளியும் பூணூல் என்றெல்லாம் பழித்து பதிவிட்ட பல பதிவுகள் பல registered பார்ப்பன விரோதிகளையே நெளியச் செய்து விட்டதைத்தான் பார்க்கிறோம்.

ஆனால் இது பனிக்கட்டியின் (iceberg) வெளியில் தெரியும் பத்தில் ஒரு பாகமே. ஞாநி சொன்னதை நானும் ஒத்துக் கொள்ளவில்லைதான். அதை எனது இப்பதிவிலேயே வெளிப்படையாக எழுதியவன். இது வரை ஞாநி தங்களுக்கு விருப்பமான கருத்தை கூறியபோதெல்லாம் அவர் பார்ப்பனர் என்பதை சௌகரியமாக மறந்து, இப்போது மட்டும் அதை வெளிக்காட்டும் அவலத்தை அதில் குறித்திருந்தேன்.

இந்த அழகில் அவரை கண்ணியமாக கண்டித்த மீட்டிங் என்று ஒரு பதிவு. எது அம்மா கண்ணியம்? ஞாநியின் ஜாதியை இங்கு இழுத்ததுதானா, அல்லது இந்தமட்டில் ஞாநியின் பெண் உறவினர்களை திட்டாமல் விட்டார்களே என்ற உணர்ச்சியா? அதாவது ஒரு தகப்பனிடம் உன் நான்கு பிள்ளைகளில் எவன் நல்ல பிள்ளை எனக்கேட்க அதற்கு அவன் கூரைமேல் நின்று கொண்டு வீட்டுக்கு நெருப்பு வைக்க நினைக்கும் அப்பிள்ளைதான் இருப்பவர்களிலேயே உத்தமமானவன் எனக் கூறுவது போலத்தான் இருக்கிறது இந்த உணர்ச்சி.

இந்த ஞாநி விஷயத்தில் இந்த ஆஸ்பெக்டை இப்பதிவு நன்றாகக் கையாளுகிறது.

ஆனால் இப்போது கூற நினைப்பதே வேறு. தமிழ் இணையத்தில் ஆ ஊ என்றால் திட்டு பார்ப்பனனை என்ற எண்ணப்போக்கு ஒரு வயிற்றுப்போக்கு போல அமைந்து விட்டது விசனிக்கத்தக்கது. தலித்துகள் இரட்டை தம்ளர் முறையா, திட்டு பார்ப்பனர்களை. சம்பந்தப்பட்ட டீக்கடைக்காரர்கள் பார்ப்பனர்கள் இல்லையே என்று தோன்றினால் இருக்கவே இருக்கிறது பார்ப்பனீயம் என்னும் ஜல்லி. கவுண்டனீயம், தேவரீயம், முதலியாரீயம், நாயுடுயிசம் (கீழ்வெண்மணி) என்றெல்லாம் கூறினால் செருப்பால் அடிக்கப்படுவோம் என பயந்து பார்ப்பனீயம் என்று இவர்களாகவே ஒரு டெஃபினிஷன் செய்து விடுவது. பிறகு டிஸ்கி வேறு. உயர்சாதீயம் என்று அதை புரிந்து கொள்ளவேண்டுமாம். அது பார்ப்பனருக்கு எதிரானதாக இல்லையாம். ஏன் ஐயா, உயர்சாதீயம் என்றே போட்டு தொலைப்பதுதானே என்றால், கோசாம்பி என்ற விளங்காத ஒருவர் கொடுத்த டெஃபினஷன் என்ற சுய புத்தியேயில்லாத சமாதானம் வேறு.

இதில் சில socalled முற்போக்கு சிந்தனை பார்ப்பனர்களே ஈடுபடுவதுதான் சோகம். மற்றவர்களுக்கு முன்னால் தாமே சகபார்ப்பனரை திட்டிவிட்டால் தாங்கள் தப்பிக்கலாம் என எண்ணுபவர்கள். பாவம், செருப்படி இவர்களுக்கும் அவர்கள் எதிர்ப்பார்க்காத தருணங்களில் கிடைக்கும் என நம்பாதவர்கள். அப்படியே கிடைத்தாலும் அதை துடைத்துப்போட்டு தங்கள் சுய கௌரவத்தை குலைத்து கொண்டவர்களாகத்தான் அவர்களை நான் பார்த்து பரிதாபப்படுகிறேன். அதனால்தான் ஞாநிக்கு இது தேவையா என்ற எண்ணத்தையும் வெளிப்படுத்தினேன்.

ஹிட்லர் காலத்தில் சில யூதர்கள் தங்கள் இனத்தினருக்கு எதிராகவே பேசினர். என்ன, அவர்கள் கடைசியாக உயிர்க்கொல்லும் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர், அவ்வளவே. யூதர்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்த 2000 ஆண்டுகளுக்கும் மேல் அவ்வாறு நடுநிலையாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு அறிவு முத்துக்களை தமது இனத்தவருக்கு எதிர்ப்பாகவே உதிர்த்த யூதர்கள் பலரை சரித்திரம் பார்த்துள்ளது. Dobi ka kuththaa, naa ghar kaa, naa gaat kaa (வண்ணனின் நாயை வீட்டிலும் சேர்க்க மாட்டார்கள், வண்ணான் துறையிலும் சேர்க்க மாட்டார்கள் என்பதைக் கூறும் ஹிந்தி சொலவடை இது). நல்ல வேளையாக இஸ்ரேல் உருவாகி இம்மாதிரி அபத்த காட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததே என்று எனக்கு ஒரு ஆறுதல்.

ஜோசியத்தில் நம்பிக்கையில்லாத ஒரு பதிவர் தனது தந்தை தனக்காகப் பெண்பார்க்க ஜோசியரை நாட அவர் எங்கோ சொறிந்து கொண்டே இவரது ஜாதகத்துடன் ஒரு பெண்ணின் ஜாதகம் பொருந்தி வருவதாகக் கூற, அதற்கு ஜோசியனை எத்தாலோ அடிக்க வேண்டும் என்று இவர் பதிவுபோட, எய்தவனிருக்க அம்பை நோகலாமோ என்று பொருள் வருமாறு நான் பின்னூட்டமிட, "ஆகா என் தந்தையை அத்தால் அடிக்கச் சொல்லும் உன்னை எத்தால் அடிப்பது" என குற்ற உணர்ச்சியுடன் என்னை ஒருமையில் திட்டினார் அப்பதிவர். இந்த மட்டில் தன் தந்தைக்காக அவரைப் பரிந்து பேசவைத்த எனது நோக்கம் நிறைவேறிய திருப்தியில் நான் வேறுவேலை பார்க்கப் போனேன். இதை இங்கு ஏன் சொல்கிறேன் என்றால் நம்மவரை நாமே விட்டுக் கொடுப்பது எவ்வளவு அபத்தமானது என்பதை வலியுறுத்தத்தான். அவ்வாறெல்லாம் செய்தால் இப்பதிவு மாதிரி பல பதிவுகளை பார்க்க நேரிடும்.

All lawyers are dishonest, because all the lawyers I have seen are charlatans. இந்த வாக்கியம் தர்க்க சாத்திரப்படி Fallacy of hasty generalization என்ற பிரிவில் வரும் தவறான வாதமாகும். அதைத்தான் பார்ப்பன எதிர்ப்பாளர்கள் செய்து வருகின்றனர். அதற்கு இந்த socalled முற்போக்கு சிந்தனை பார்ப்பனர்களும் துணை போவதுதான் பெரிய நகைமுரண். அதை எடுத்து சொன்னால், "என்ன செய்ய வேண்டும்? பிராமண சங்கத்தில் உறுப்பினர் அட்டை வாங்கி இதுவரை செய்ததெல்லாம் தவறு என்று இம்போஸிஷன் எழுத வேண்டுமா"? என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள்.

அவர்கள் எல்லோருக்கும் நான் கூறுவது இதுதான். நீங்கள் நுனிமரத்திலிருந்து கொண்டு அடிமரத்தை வெட்டுகிறீர்கள். சொன்னால் புரிந்து கொள்ளாது போனால் நீங்களே விழும்போது புரிந்து கொள்வீர்கள். ஆனால், அப்போதும் திருடனுக்கு தேள் கொட்டியதுபோலத்தான் இருக்க முயலுவீர்கள் என அஞ்சுகிறேன்.

No comments: