அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, January 20, 2009

பயணி தவறவிட்ட ரூ. 3 லட்சத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்!

பயணி தவறவிட்ட ரூ. 3 லட்சத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்!

சென்னை, ஜன. 17: தனது ஆட்டோவில் பயணி தவறவிட்ட ரூ. 3.5 லட்சத்தை, ஆட்டோ டிரைவர் பாபு சென்னை வியாசர்பாடி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தார்.

இதுகுறித்த விவரம்:

வியாசர்பாடியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாபு, தன்னுடைய ஆட்டோவில் வெள்ளிக்கிழமை இரவு பாரிமுனையில் இருந்து அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் வரை சவாரி சென்றார்.

கருப்பு நிறத்திலான பையை பயணி ஆட்டோவிலேயே மறந்து சென்றுவிட்டார்.

பாபு இந்த பையை வியாசர்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்தப் பையை சோதனை செய்ததில் அதில் ரூ. 3.5 லட்சம் இருந்தது தெரியவந்தது.

No comments: