அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, January 21, 2009

இழந்த சில இனிமைகள்

அதிகாலை இறை வணக்கத்தின் பின்!
நண்பர் குழாம் சூழ காதூரம் கடந்து,
கீத்து கொட்டைகையின் கீழ் இயங்கும்,
ஹாஜியார் தேனீர் கடை தனில்...
சிற்றூண்டியாய் புரோட்டா,சால்னாவும்
சிருகுவளையில் தேத்தணியும் குடித்தகாலம்.
ஒவ்வொரு நண்பரிடமும்...
வகை ,வகையாய்,
வார்த்தை ஜாலம் செய்து.
வண்டி பேட்டையெனும் -
சிறு வணிக பகுதி கடந்து-
பெறு வெளி விளையாட்டு திடல் அடைந்து.
உடல் வேர்க்க !
வேங்கைபோலும்,செம்மான் போன்றும்,
சிறு வெண் முயல் போன்றும்!களிப்புடனும்,துடிப்புடனும்,ஆர்பறிக்கும் கடல் அலைப்போன்றும்...
இன்ன பிறசெயல் செய்தும்.
விளையாடிய அந்ததருனங்கள்....
இது போல எத்தனை மகிழ்வுதந்த நிகழ்வுகள்?
கால சக்கரத்தில் சுழன்று,அரைப்பட்டாலும்.
இன்றும் நிழலாக நெஞ்சத்தில் ஊசலாடும்.
இன்று இழந்து தவிக்க வைக்கும் அன்னாள் இன்பம்,
மீண்டும் எனைத்தேடி வருமோ?

No comments: