அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, January 18, 2009

இஸ்ரேல் போர் நிருத்தத்தை அறிவிக்க வேண்டும் - பான் கி மூன

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

காஸாவில் தொடர்ந்து நடந்து வரும் மனித படுகொலைகளால் உலகமே வெட்கி தலை குணிகிறது.

ஐக்கிய நாடு சபை என்பது அதன் அதிகாரப் பூர்வ உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டு இயங்குகிறதா ?

அல்லது

அமெரிக்கா இயக்குகிறதா ?

அல்லது

இஸ்ரேல் இயக்குகிறதா ?

எதற்கு போலி வேடம்

வேடத்தை கலையுங்கள் !

ஐநா வை அமெரிக்காவும், இஸ்ரேலும் மாத்திரமே இயக்குவதாக பகிரங்கமாக அறிவியுங்கள் !

சின்னஞ் சிறிய நாடுகளாக சிதறிக் கிடக்கும் முஸ்லீம் நாடுகளை அழித்தொழிப்பதற்கு அல்லது அபகரித்துக் கொள்வதற்கு அல்லது அதனுடைய பொருளாதாரத்தை உறிஞ்சுவதற்காக அமெரிக்காவும், இஸ்ரேலும் பகல் கொள்ளை அடிப்பதற்கு வேண்டி இணைந்து இயக்கும் அமைப்புத் தான் ஐநா என்பது வெட்ட வெளிச்சமானதற்குப் பிறகாவது நடுநிலைப் போக்குள்ள நாடுகளும், முஸ்லீம் நாடுகளும் ஐநா வை விட்டு வெளியேறுங்கள்.

பயங்கரவாத இஸ்ரேல் லெபனானுடைய மேற்கு கரையையும், பாலஸ்தீனத்தின் காஸாவையும் அபகரித்தது முதல் இன்றுவரை ஒவ்வொரு முறை அதனுடைய அடாவடி செயலுக்கெதிராக 99 சதவிகிதம் ஐநாவின் உறுப்பு நாடுகள் வாக்களித்த போதிலும் ஒவ்வொரு முறையும் அவைகளை பயங்கரவாத இஸ்ரேல் மீறியே வந்திருக்கிறது.

ஐநாவின் உறுப்பு நாடுகளே இந்த கேவலத்திற்காக வெட்கப் படுங்கள்.
நீதிக்கு சாடசியாகுங்கள்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமரிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். திருக்குர்ஆன் 5:8

No comments: