அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, January 19, 2009

ஒபாமாவைக் கொல்லப்போவதாக மிரட்டல

ஜாக்சன் (மிஸ்ஸிஸிப்பி)
அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பாரக் ஒபாமாவைக் கொல்லப்போவதாக இணையத்தில் மிரட்டல் விடுத்த விஸ்கான்சின் ஆடவர், மிஸ்ஸிஸிப்பி நகர நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்.
நாற்பத்திரண்டு வயதாகும் ஸ்டீவன் ஜோசப் கிறிஸ்தோபரை இரகசியப் போலிஸ் கைது செய்தனர். திரு ஒபாமாவைக் கொல்லப்போவதாக மிரட்டியதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. “’நாட்டின் நலனுக்காக” கொலை செய்ய முடிவெடுத்ததாக கிறிஸ்தோபர் கூறியதாக அரசாங்க வழக்குரைஞர்கள் கூறினர்.
அடுத்த வியாழக்கிழமை பிணைத்தொகை விசாரணை நடைபெறும்வரை அவரைக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments: