அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, February 4, 2009

ராமேசுவரத்தில் போலி டாக்டர்கள் 3 பேர் கைது

ராமேசுவரம், பிப்.2-

ராமேசுவரத்தில் போலி டாக்டர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரகசிய தகவல்

ராமேசுவரம் பகுதியில் பொதுமக்களுக்கு போலி டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் தங்கச்சிமடம் ஆரம்பசுகாதாரநிலைய டாக்டர் கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் ராமேசுவரம் திட்டக்குடி அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு கண்காணித்தனர். அப்போது அங்கு சேலம் குமரன் தெருவை சேர்ந்த சீனிவாசன் (வயது26), நாமக்கல் அருகே உள்ள கோலாம்புதூரை சேர்ந்த சரவணன்(29), பட்டுக்கோட்டை தாலுகா தாமரங்கோட்டை அய்யாத்துரை(23) ஆகிய 3 பேரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்களிடம் டாக்டருக்கு படித்ததற்கான ஆவணங்கள் இல்லை. மேலும் சான்றிதழ்கள் இல்லாதததும் சீனிவாசன் 12-ம்வகுப்பும், சரவணன் எம்.ஏ.வும், அய்யாத்துரை பி.எஸ்.சி பட்டப்படிப்பும் படித்திருந்தது தெரியவந்தது. ஊசிபோட கற்றுக்கொண்டு டாக்டர்போல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

கைது

இதைதொடர்ந்து ராமேசுவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ஏராளமான மாத்திரைகள் மற்றும் மருந்துகளையும் பறிமுதல் செய்தனர்.

No comments: