அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, February 6, 2009

வேறொரு பெண்ணுடன் சென்ற வாலிபர் கைது

ராமேசுவரம்,பிப்.6-

ராமேசுவரத்தில் மனை வியை விட்டு விட்டு வேறொரு பெண்ணுடன் சென்ற வாலிபரை போலீ சார் கைது செய்தனர்.

வாலிபர்

ராமேசுவரம் சந்தன மாரி யம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரகுமத் நிஷா(வயது 31). இவரது கணவர் இடி அமீன்(33). இவர்களுக்கு கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் இடி அமீன் என்பவருக்கும் ராமேசுவ ரத்தை சேர்ந்த இளம் பெண் ணுக்கும் தொடர்பு ஏற்பட் டதாக கூறப்படுகிறது. இதை கண்டித்த மனைவி ரகுமத் நிஷாவை இடிஅமீன் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படு கிறது. மேலும் கடந்த 28-ந் தேதி இளம்பெண்ணுடன் இடிஅமீன் சென்னை சென்று விட்டாராம்.

கைது

இதுகுறித்துரகுமத்நிஷா ராமேசுவரம் அனைத்து மக ளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேசுவரி வழக்கு பதிவு செய்து சென் னையில் இருந்த இடி அமீனை கைது செய்தார். மேலும் அவர் ராமேசுவரம் அழைத்து வரப் பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட பின்னர் சிறை யில் அடைக்கப்பட்டார்.

No comments: