அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, February 4, 2009

மேலப்பாளையம் முஸ்லிம் பெண்கள் மீது அவதூறு

மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என்று அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான், ஆனால் கமாலுதீன் மதனி அண்ட் கம்பெனியோ இல்லை இல்லை அவை அனைத்தும் எங்களுடைய சொத்து என்று கூறிவருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே தொழுகை நடக்கும் பள்ளிவாசல்களை பூட்டுவதையும் வழக்கு தொடர்வதையும் கமாலுதீன் மதனி அண்ட் கம்பெனி வழக்கமாக கொண்டுள்ளது.

பாபர் மஸ்ஜிதை இடித்துவிட்டு இன்னும் இடிக்க வேண்டிய பள்ளிகள் மூவாயிரம் உள்ளன என்று சங்பரிவார் கூறுவதை போல, கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக், மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் போன்ற பல பள்ளிவாசல்களை கைப்பற்றுவது அல்லது பூட்டுவது என்ற முயற்சியில் இறங்கிய ஜாக், குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி தவ்ஹீத் மர்கஸ், பிர்தௌஸியா நகரிலுள்ள தவ்ஹீத் மர்கஸ், புதுத்தெரு மஸ்ஜிதுல் அஷ்ரஃப் போன்ற பல பள்ளிவாசல்கள் தங்களுடைய கைப்பற்ற வேண்டிய பட்டியலில் இருப்பதாகவும் கூறுகிறது. அவற்றை அபகரிக்க, ஆதாரங்களை பலமாக்க, முன்னரே தயாராகிவிட்டது. பல ஆண்டுகளாக ஜாக்கின் மௌலவிதான் இமாமாக இருக்கிறார் என்று கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக்கில் உமரியை ஆதாரமாக காட்டியது போல் இந்த பள்ளிகளிலும் தங்களுடைய மௌலவிகளை தொழவைக்க செய்து வருகின்றது.

இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபண்ணவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்; ''நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை'' என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் - ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான். (திருக்குர்ஆன் 9:107)

சொத்துக்காக அடித்துக் கொள்பவர்கள் அடித்துக் கொள்ளட்டும், பள்ளிவாசலில் தொழுகையை தடை செய்யாதவரைக்கும் ஓ.கே.

ஆனால், மேலப்பாளையம் மஸ்ஜித் முபாரக்கை அபகரிக்க அல்லது பூட்ட முயற்சித்த ஜாக், மேலப்பாளையம் முஸ்லிம் பெண்களை மிகவும் அசிங்கப்படுத்தியுள்ள விபரம் நம் கவனத்திற்கு வந்துள்ளது.


'மேலப்பாளையத்தில் ஜாக் பள்ளிவாசலை அபகரிக்க ததஜ சதி' என அல்ஜன்னத்தில் எழுதியுள்ள கமாலுதீன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

'தற்போது மேலப்பாளையம் மஸ்ஜிதுல் ரஹ்மானில் உரியவர்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காக பெண்கள், பிள்ளைகளுடன் பள்ளியில் குடியிருக்கின்றனர். அங்கேயே சமையல் காரியங்களை செய்து வருகின்றனர். மீறி உள்ளே வருபவர்கள் மீது பெண்களை வைத்து தவறான வழக்கு தொடரலாம் என்ற திட்டத்தில் இருக்கின்றனர்.'

அல் ஜன்னத் - ஆகஸ்ட் 2006

நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (திருக்குர்ஆன் 16:105)

நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (திருக்குர்ஆன் 2:42)

அன்றைய தினத்தில் எந்த பெண்களுமே மஸ்ஜிதுர் ரஹ்மானில் இல்லை, பெண்கள் தங்குவதற்கு இது தர்ஹா அல்ல, அல்லாஹ்வின் பள்ளி இது. அல்லாஹ்வின் பள்ளியில் பெண்கள் தங்குவதற்கு ரமலான் கடைசி பத்தில் மட்டுமே அனுமதி உண்டு. ஆனால் இந்த சம்பவம் நடந்தது ரமலான் கடைசி பத்திலும் அல்ல என்று மேலப்பாளையம் ஊர்மக்கள் கூறுகின்றனர். ஆனால், பெண்களை பள்ளிவாசலில் குடிவைத்ததாக ஜாக்கின் கமாலுதீன் சொல்கிறார். மேலும் ததஜ பெண்களை வைத்து தவறான வழக்கு தொடரலாம் என்ற திட்டத்தில் இருப்பதாகவும் கமாலுதீன் சொல்கிறார்.

பெண்களை வைத்து தவறான வழக்கு என்றால் என்ன?

• நாங்கள் பள்ளிவாசலில் தங்கி இருந்தபோது வெளியூரிலிருந்து வந்த கமாலுதீன் மதனியும் அவருடைய ஆட்களும் எங்களை படுக்கைக்கு அழைத்தார்கள் என்று அந்த மேலப்பாளையம் தவ்ஹீத் சகோதரிகளை வைத்து வழக்கு தொடருவதற்காக, ததஜ அப்பெண்களை பள்ளிவாசலில் வைத்திருந்ததா?

• நாங்கள் பள்ளிவாசலில் தங்கி இருந்தபோது வெளியூரிலிருந்து வந்த கமாலுதீன் மதனியும் அவருடைய ஆட்களும் எங்கள் கையை பிடித்து இழுத்தார்கள் என்று சொல்லி வழக்கு தொடர்வதற்காகவா?

• நாங்கள் பள்ளிவாசலில் தங்கி இருந்தபோது வெளியூரிலிருந்து வந்த கமாலுதீன் மதனியும் அவருடைய ஆட்களும் எங்களை பள்ளிவாசலில் வைத்து கற்பழித்து விட்டார்கள் என்று சொல்லி வழக்கு தொடர்வதற்காகவா?

• நடத்தை கெட்ட பெண்கள் கூட இப்படி ஒரு அபாண்டத்தை கூற அஞ்சுவார்களே?

• இப்படி சொல்லக்கூடியவர்கள் தவ்ஹீத்வாதிகளாக இருக்க முடியுமா?

அல்லாஹ் மூமின்களைப்பற்றி குறிப்பிடும் போது,

'அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்;. மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள் (திருக்குர்ஆன் 25:72) என்று கூறுகிறான்.

ஆனால், மேலப்பாளையம் தவ்ஹீத் பெண்கள் நடத்தை கெட்டவர்கள் என்று சொல்கிறாரா கமாலுதீன்!

தங்களையே இழிவுபடுத்திக் கொள்ளக்கூடிய அளவிற்கு பொய்சாட்சி சொல்லக்கூடியவர்கள் தான் மேலப்பாளையம் பெண்கள் என்று சொல்கிறாரா கமாலுதீன்!

தங்களின் மானத்தை அடகு வைத்து பொய்வழக்கு தொடருபவர்கள் தான் மேலப்பாளையம் முஸ்லிம் சகோதரிகள் என்று சொல்கிறாரா கமாலுதீன்!

நிச்சயமாக இவர்கள் சொல்லில் வெறுக்கத்தக்கதையும், பொய்யானதையுமே கூறுகிறார்கள் - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொறுப்பவன், மிகவும் மன்னிப்பவன்.
(திருக்குர்ஆன் 58:2)

அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது, அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்;. மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு. (திருக்குர்ஆன் 2:10)

நம்முடைய மேலப்பாளையம் முஸ்லிம் பெண்களை இவ்வளவு தரம் தாழ்த்தி கூறி இருக்கிறார். அதைக் கண்டு கொதித்தெழுந்து கமாலுதீனை கண்டிக்க வேண்டிய முஸ்லிம் சமுதாயம், இது ஏதோ கோஷ்டி சண்டை என எண்ணி மௌனமாக இருந்துள்ளது.

தமிழகத்தில் தவ்ஹீத் எழுச்சிக்கு காரணமானவர்களில் ஒருவராக இருந்த கமாலுதீன் இன்று மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டு கப்ரு வணங்கிகளோடு கைகோர்த்துக் கொண்டும் மார்க்கப் பிரச்சாரத்தை விட மார்க்கத்தின் பெயரால் சொத்து சேர்ப்பதையே பிரதானமாகவும் கொண்டுள்ளதால் சத்தியம் அவருடைய கண்களை மறைக்கின்றது.

(இத்தகைய பொய்யர்கள் அனுபவிப்பதெல்லாம்) சொற்ப இன்பம் தான்; (மறுமையிலோ) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு. (திருக்குர்ஆன் 16:117)

ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 25:70)

இன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியாவராவார். (திருக்குர்ஆன் 25:71)

No comments: