அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, February 4, 2009

தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி ஆட்சியரிடம் பள்ளி மாணவர்கள் மனு

பரமக்குடி, பிப். 2: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ்குமார் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பரமக்குடி அருகே உள்ள நெடுந்துளசி பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்தியாகுவை மற்றக்கோரி பள்ளி மாணவர்கள் ஆட்சியரிடம் மனுக் கொடுத்தனர்.

நெடுந்துளசி ஆர்சி தொடக்கப்பள்ளியில் சந்தியாகு 3 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இவர் ஓராண்டாகப் பள்ளிக்கு வருவதில்லை.

ஏதாவது ஒருநாளில் பள்ளிக்கு வந்தாலும் ஒழுங்காக பாடம் நடத்துவதில்லையாம்.

இதுகுறித்து கிராம மக்கள் அவர்மீது நடவடிக்கை எடுக்க நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி நெடுந்துளசி கிராமத் தலைவர் ஜோசப் தலைமையில் பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமாரிடம் பள்ளியின் தலைமை ஆசிரியரை உடனே இடமாற்றம் செய்யக் கோரினர்.

அவரை மாற்றம் செய்யாத வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என அந்த மனுவில் மக்கள் தெரிவித்திருந்தனர்

No comments: