அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, February 6, 2009

மூட்டை சுமக்கும் பிஞ்சுக்கைகள்

எங்கே போகிறார்கள் இன்றைய பெற்றோர்கள் என்று பட்டிமன்றம் வைக்கும் அளவுக்கு போய்விட்டது இன்றைய கல்வியும், குழந்தைகள் தூக்கி சுமக்கும் புத்தக மூட்டையும். இது ஏன் திடீர் என்று இவ்வளவு மாற்றம்? [ 20 வருடத்துக்கு முன் இப்படி இல்லையே?..]


தொடர்ந்து வந்த வாழ்க்கைமுறையில் ஒரு மாதிரி குடும்ப பட்ஜெட் எகிரியது ஒரு காரணமாக இருக்களாம், இதனால் வரும் காலத்தில் பிள்ளைகள் எங்கே வாழ்க்கையை எதிர்கொள்ள தகுதியில்லாமல் போய் விடுவார்களோ என்று ஒரு விதமான மாயை உருவாகி விட்டது,

கவனிக்க: இன்றைய தேதியில் வாழ்க்கையின் பட்ஜெட்க்கு தன்னை பிழிந்து பணமாக அனுப்பும் யாரும் இது போன்ற கான்வென்ட்டில் படித்தவர்கள் அல்ல.

இல்லை அந்த கஷ்டம் வேண்டாம் என்றுதான் ஒவ்வொரு கான்வென்ட் வாசலிலும் நிற்கிறோம் எங்கிறீர்களா?...

ஆங்கில அறிவு மட்டும் பிள்ளைக்கு பொறுப்புணர்வை தராது. அதற்க்கு கொஞ்சம் அனுசரனை, அன்பு, நான் பக்கத்தில் இருக்கிறேன் என்ற security conciousness எல்லாம் தேவை.
இப்படியாக விழுந்து விழுந்து படித்த எத்தனையோ விசயஙகளை வெள்ளைக்காரன் இப்போது அவனது வெப்தளத்தில் குறைந்த விலைக்கு கூவி கூவி விற்கிறான். [ உதாரணம்: currency converter, investment calculator, scientific calculator].கொஞ்சம் காலம் ஒடிவிட்டால் அதே இலவசமாக தருகிறேன் என்று ஒரு கூட்டம் விளம்பரத்தில் மின்னும் [Flash advertisement].

நீதி: இன்றைக்கு அதிசயமாக தெரியும் ஒரு கல்வி / கல்வி முறையை வருங்காலத்தில் சேதுரோட்டில் ஒரு ராஜஸ்தான்காரனிடம் கூறு இன்னவிலை என்று நீங்கள் நிர்ணயம் செய்யலாம்.

குழந்தைகளை அது எடுக்கும் மார்க்கை வைத்து அன்பு செலுத்தாதீர்கள். படிப்பதில் அல்லது மார்க் எடுக்கும் விசயத்தில் கண்டிப்பு இருக்களாம் அதுவே உஙகள் அன்புக்கான பண்டமாற்றுமுறையல்ல.

இறக்கும் தருவாயிலும் இஸ்லாம் உன்னுடன் இருக்கவேண்டும் என்று புகட்டுங்கள்.

குழந்தைகள் பெரியவர்களானவுடன் நீங்கள் ஈசி சேரில் அமர்ந்து அவர்களிடம் மனம் விட்டு பேச நிறைய விசயங்களையும் , நிகழ்வுகளையும் சேமியுங்கள்..இப்போது உள்ள "Home works" அதை அழித்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

No comments: