அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, February 6, 2009

பரமக்குடியில் பிறந்த நாள் அன்று பெற்றோர் கண் எதிரில் குழந்தை லாரி சக்கரத்தில் சிக்கி பலி

பரமக்குடி,பிப்.5-

பரமக்குடியில் பிறந்தநாள் கொண்டாடிய குழந்தை பெற்றோர் கண் முன்னே லாரியில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந் தது.

4 வயது குழந்தை

மதுரை மாவட்டம் திருமங் கலத்தை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 40). இவரது மனைவி தில்சாத்பானு(39). இவர்களது மகள் ரோசன் சபிகா(9). இவர்கள் தற்போது காட்டு பரமக்குடி சேதுபதி நகரில் வசித்து வருகின்றனர். முகமது ரபீக் டிரைவராகவும், தில்சாத் பானு பரமக்குடி அருகே உள்ள தீயனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனர். குழந்தை ரோசன் சபிகா பர மக்குடியில் உள்ள பள்ளி ஒன் றில் 4-ம் வகுப்பு படித்து வந் தார்.

நேற்று பிறந்த நாள் என்ப தால் அனைவருக்கும் இனிப்பு வழங்கிவிட்டு திருமங்கலத் தில் உள்ள தாத்தா, பாட்டியி டம் ஆசிர்வாதம் வாங்க தனது பெற்றோர்களுடன் குழந்தை ரோசன் சபிகா மோட்டார் சைக்கிளில் பரமக்குடி பஸ் நிலையத்திற்கு வந்தாள்.

குழந்தை பலி

அப்போது பின்னால் வந்த சரக்கு லாரி மோட்டார் சைக் கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். குழந்தை ரோசன் ரபிகா லாரி யின் சக்கரத்தில் சிக்கினார். குழந்தையின் இடுப்பில் சக் கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. முகமது ரபீக், தில்சாத் பானு படுகாயம் அடைந் தனர்.

உடனே அவர்கள் பரமக் குடி ஆஸ்பத்தியில் அனுமதிக் கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இறந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கைது

இதுகுறித்து பரமக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு, சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீ சார் வழக்கு பதிந்து விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா மானூர் பகு தியை சேர்ந்த நாகராஜனை கைது செய்தனர். பிறந்தநாள் கொண்டாடிய குழந்தை இறந்த சம்பவம் அப் பகுதியில் சோகத்தில் அழத் தியுள்ளது.

No comments: