அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, February 4, 2009

நபிகள் நாயகம் குறித்து கிறிஸ்தவரின் விமர்சனமும் அதற்கு விளக்கமும்!

"பைபிளில் ஏராளமான தீர்க்கதரிசிகள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை முடித்ததாகக் கூறப்பட்டுள்ளதே? இளம்பெண்கள், சிறுமியர் என்ற வித்தியாசம் இன்றி போரில் கைப்பற்றப்பட்ட பெண்களையும் போராளிகள் தங்களுக்காக வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறதே? இந்த அடிப்படையை வைத்து பைபிளை நீங்கள் ஏன் விமர்சிக்கவில்லை?"
ஜாண் என்ற கிறிஸ்தவர் அனுப்பிய மறுமொழியும் அதற்கான விளக்கமும்!

John Said,
//சவுலை பற்றி சரியாக சொல்லி இருக்கிறிர்கள். இது போலத்தான் ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு அரபு நாட்டில் ஒரு வியாபாரி வாழ்ந்து வந்தார். அவருக்கு நாற்பது வயது இருக்கும்போது ஒரு நாள் திடீரென்று நாந்தான் கடவுள் அனுப்பிய தூதர் என்றார். கடவுளின் செயலாளர் என்னிடம் வந்து இதை சொன்னார் என்றார். பிறகு கடவுள் என் மூலமாக ஒரு வேதத்தை உலகிற்கு சொல்லப்போகிறார் என்றார். இதற்கு முன்பும் கடவுள் தன்னுடைய தூதர்களை உலகிற்கு அனுப்பி இருக்கிறார், அவர்களுக்கு வேதங்களும் கொடுத்து இருக்கிறார். ஆனால் அந்த வேதங்களும், இறைதூதர்களும் அந்த கடவுளால் பாதுகாக்கபட முடியாமல் போய்விட்டதால் என் மூலமாக கடவுள் புது வேதம் தருகிறார். அதை அவரே பாதுகாப்பதாக சொன்னார் என்றும் அந்த வியாபாரியாக இருந்த திடீர் இறைத்தூதர் சொல்லிக்கொண்டார். என்னைப்பற்றி அங்கே அப்படி சொல்லி இருக்கிறது, இங்கே இப்படி சொல்லி இருக்கிறது என்றும் கூறினார். தினமும் என்மீது கடவுள் வந்து இறை வேதம் சொல்லிவிட்டு போகிறார் என்று சொன்னார். இதை எல்லாம் அவரே சொல்லிக்கொண்டார். பாவம் படிப்பறிவு இல்லாத அரபு மக்கள். அவர் சொன்னதை எல்லாம் நம்பிவிட்டார்கள். எல்லாரும் நான்கு மனைவிதான் திருமணம் செய்து கொள்ளவேண்டும். ஆனால் நான் மட்டும் குழந்தை அல்லது மாமி என்ற கணக்கில்லாமல் எத்தினைபேரை வேண்டுமென்றாலும் திருமணம் செய்வேன், அப்படி செய்ய எனக்கு இறைவன் சிறப்பு அனுமதி தந்திருக்கிறார் என்றார். நன் சொல்வது மட்டும் தான் உண்மை, இதற்கு முன்பு, இறைவன் பிற இறைதூதர்கள் மூலம் சொன்னது எல்லாம் தப்பு என்றார். எப்படியோ அடித்து பிடித்து அந்த நாட்டுக்கு மன்னராகவும் ஆகிவிட்டார். பிறகு, பிற நாட்டு மன்னர்களுக்கு கடிதம் அனுப்பினார் எப்படி தெரியுமா "நாந்தான் இறைத்தூதர் நான் சொல்றது தான் இறைவேதம். இத நம்பினால் உனக்கு விமோசனம் இல்லேன்னா கஷ்டம் தான்" இந்த மாதிரி. இப்படியே அவரோட மதத்துக்கு ரொம்ப ஆட்களை சேர்த்துக்கிட்டார். இதுல முக்கியமான விசயம் என்னனா, கடவுளை பத்தி தப்பா பேசினாக்கூட அவரோட ஆட்கள் பொருத்துப்பாங்க, ஆனா திடீர் இறைதூதர் ஆன அந்த வியாபாரிய எதாவது ஒரு வார்த்தை தப்பாக பேசிவிட்டால் பேசியவர் பரம்பரையயையே கொலை செய்து விடுவார்கள். இது இந்த காலத்திலும் நடக்கிறது. இன்னிக்கு உலகத்துல நிறைய நாடுகளில் அவரோட தொண்டர்கள் இருக்காங்க. அவங்கள பொறுத்த வரைக்கும் அவங்கதான் உண்மை கடவுளை கும்பிடுறாங்க மத்தவங்க எல்லாம் சாத்தான கும்பிடுறாங்க. பிற கடவுள கும்பிடுரவங்க எல்லாம் கேவலமான காபிர்கள். இதெல்லாம் அந்த திடீர் இறைத்தூதர் (வியாபாரி) சொன்னது. இப்படியாக பல கோடி மக்கள் இன்னும் அவர நம்பிட்டுதான் இருக்காங்க. அவங்க வணங்குற கடவுள் பத்தியும் அவர்தான் சொன்னார், அந்த கடவுள் வேதம் தந்ததாவும் அவர்தான் சொன்னார், அவர்தான் இறைதூதர்நும் அவர்தான் சொன்னார், ஆகா மொத்தத்தில் அவங்க மதத்தில் எல்லாமே அவர் சொன்னது தான்.ரொம்ப வேடிக்கை என்னன்னா இதுக்கு முன்னாடியும் இதே கடவுள் வேற இறைதூதர்களுக்கு வேதம் கொடுத்தாராம். அதுல மனுஷ கரங்கள் விளையாடி விட்டதாம் வேதம் குடுத்த கடவுளால அத காப்பாத்த முடியலையாம் அதுனால இந்த வியாபாரி (திடீர் இறைத்தூதர்) மூலமா புது வேதம் குடுத்தாராம். இதும் அந்த திடீர் இறைத்தூதர் (வியாபாரி) சொன்னது. இவரையும் இன்னும் நம்பிட்டுதான் இருக்காங்க உலகத்துல நிறைய பேர். என்ன பண்றது உலகத்துல இந்த மாதிரி நிறய நடந்துகிட்டுதான் இருக்கு. //

அன்பர் ஜாண் அவர்களுக்கு,

பவுல் பற்றி பதியப்பட்ட செய்திகள் அனைத்தும் பைபிளிலிருந்து எடுக்கப்பட்டவை. இதனை மறுக்க இயலாத நீங்கள் அவர் பற்றிக் கூறியது அனைத்தும் சரியானவயே என்று ஒப்புக் கொண்டுள்ளீர்கள். அத்துடன் உங்களின் இயலாமை கோபமாக வெளிப்பட்டு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது விமர்சனத்தை வைத்துள்ளீர்கள். பொதுவாக தங்களால் பதிலளிக்க இயலாத விஷயங்களுக்கு இப்படி எதிர்மறைக் கேள்விகளை எழுப்புவது கிறிஸ்தவர்களின் வழக்கம். சிறுபிள்ளைத் தனமான இச்செயல் கிறிஸ்தவத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் சரியானவை தான் என்று மேன்மேலும் உறுதிப்படுத்துகிறது. இனி உங்களின் விமர்சனத்துக்கு வருவோம்.

முஹம்மது (ஸல்) அவர்கள் பவுலைப் போன்று திடீரென்று ஒரு ஒருநாள் இதோ இறைவன் என் முன் தோன்றினான் என்று கூறவில்லை. நாற்பது ஆண்டுகள் தன் சமூகத்துக்கு மத்தியில் சாதாரண ஒரு மனிதனாக நடமாடுகிறார்கள். ஆனாலும் தன்னிகரற்ற உயர்ந்த ஒழுக்கத்துடன் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்று வாழ்கிறார்கள். நீங்கள் கூறியது போல் வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்களள் வியாபாரத்தில் காட்டிய அசாத்திய நேர்மையைக் கண்டு வியந்து அவர்களின எஜமானியாக இருந்த உயர் குலத்தைச் சேர்ந்த கதீஜா அம்மையாரே அவர்களைத் திருமணம் முடிக்க தன் இசைவைத் தெரிவிக்கிறார்கள். தன் சமூகமக்களிடம் காணப்பட்ட தீச்செயல்களைக் கண்டு மனம் வெறுத்து தனிமையை நாடிச் செல்கிறார்கள். ஹிரா குகையைச் சென்றடைந்து அங்கு இறைவனை வணங்கி காலத்தைக் கழிக்கிறார்கள். இவ்வாறு மூன்று வருடம். அப்போது தான் வானவர் அவர் முன் தோன்றி இறைசெய்தியை அறிவிக்கின்றார்கள். அப்போது கூட அவர்களுக்கு தெரியாது இறைவனின் தூதர்தான் தன்னிடம் வந்தவர் என்று. அதனால்தான் பயந்து வீட்டுக்கு வந்து தன் மனைவியிடம் தனக்கு ஏதோ நேர்ந்துவிட்டதாக பயப்படுகிறேன் என்று கூறினார்கள். மனைவியோ, உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். தாங்கள் உறவுகளுடன் இணங்கி வாழ்கின்றீர்கள், சிரமப்படுவோரின் சுமைகளைச் சுமந்து கொள்கின்றீர்கள், வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள், விருந்தினரை உபசரிக்கிறீர்கள், உண்மையான சோதனையில் அகப்பட்டவர்களுக்கு உதவுகின்றீர்கள் என்று கூறித் தேற்றுகிறார்கள். அதற்குப் பின்னர்தான் அவர்களுக்குத் தெரியவருகிறது, தன்னிடத்தில் வந்தவர் வானவா ஜிப்ரீல் என்பதும் தான் இறைவனின் திருத்தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்பதும்.

மேற்கண்ட செய்திகளில் எந்த முரண்பாடும் இல்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர்தான் என்பதற்கு அவர்களுக்கு இறக்கப்பட்ட குர்ஆனின் வசனங்களே சாட்சி! அவை நாற்பது வயது வரை அவர்கள் அறிந்திராத அற்புத செய்திகள். அதனால் தான் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாமைத் தழுவினர். அதனால் தான் அன்றைய பெரிய இலக்கிய வாதிகள் கூட 'இது மனிதனின் சொல்லல்ல' என்று வியந்து தங்களையும் இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டனர். அதனால் தான் 13 ஆண்டுகளில் அரேபியத் தீபகற்பமே இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டது. அதனால் தான் பத்ரு வெற்றி! மக்கா வெற்றி! என் அவர்களின் முன்னறிவிப்புகள் நடந்தேறியது. அதனால் தான் மிகக் குறுகிய காலகட்டத்தில் இஸ்லாம் உலகெங்கும் பரந்து வியாபித்தது. இப்போது சொல்லுங்கள் நீங்கள் கூறியது போல் படிப்பறிவு இல்லாத அரபு மக்கள்தான் அவர்களை ஏற்றுக் கொண்டார்களா? இல்லை சகோதரரே! நிச்சயமாக இல்லை. அன்று முதல் இன்று வரை மாமன்னர்கள் முதல் விஞ்ஞானிகளும் சிந்தனையாளர்களும், ஏன் பாமரர்களும் தங்கள் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். அன்றைய அரபுகளின் ஏற்றம் மிக்க தலைவர் உமர், மதீனாவின் கோத்திரத் தலைவர் ஸஅது பின் முஆது, மாமன்னர் நஜ்ஜாஷி, என சமுகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களையும் இந்த மார்க்கம் ஈர்த்தது.

இப்படி ஏராளமான செய்திகளைக் கூற முடியும். அவற்றையெல்லாம் கூறினால் அதற்கு இப்பக்கங்கள் போதாது.

இனி நீங்கள் கூறிய திருமணம் சம்மந்தப் பட்ட விஷயம். நபிகள் நாயகத்தை நீங்கள் நிராகரிப்பதால் இத்தகைய விமர்சனங்களை வைக்கின்றீர்கள. திருமணம் செய்யாமலிருப்பதே கடவுளுக்குப் பிடித்தமான செயல் என்று நடைமுறைக்கு ஒத்து வராத பைபிளின் தத்துவத்தின் அடிப்படையில் இஸ்லாமை நீங்கள் பார்ப்பதால் அனுமதிக்கப்பட்ட திருமணத்தைக் குறித்து நீங்கள் விமர்சிக்கின்றீர்கள. 1400 வருடங்களாக நபிகள் நாயகத்தை இறைதூதராக, இஸ்லாமைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட அனைத்து முஸ்லிம்களுக்கும் அவர்களின் திருமணம் குறித்துத் தெரியும். திரிபு வாதம் செய்து நீங்கள் குறிப்பிட்டது போல் அவர்கள் அதனை நம்பவில்லை. இறைதூதர்கள் அனைவரும் திருமணம் முடிப்பவர்களே! காரணம் அவர்களும் மனிதர்களே. இனி உங்களை நோக்கி ஒரு கேள்வி. பைபிளில் ஏராளமான தீர்க்கதரிசிகள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை முடித்ததாகக் கூறப்பட்டுள்ளதே? இளம்பெண்கள், சிறுமியர் என்ற வித்தியாசம் இன்றி போரில் கைப்பற்றப்பட்ட பெண்களையும் போராளிகள் தங்களுக்காக வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறதே? இந்த அடிப்படையை வைத்து பைபிளை நீங்கள் ஏன் விமர்சிக்கவில்லை? ஒர் உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். முஹம்மத் (ஸல்) அவர்களின் தூதை நிராகரித்த அன்றைய மக்கள்கூட அவர்களின் திருமணம் குறித்தோ அவர்கள் பெண்விரும்பி என்றோ விமர்சனங்களை வைக்கவில்லை. அதனால் முஹம்மத் (ஸல்) அவர்களின் தூதை நிராகரிக்க இத்தகைய வாதங்கள் எடுபடாது. அவர்கள் கொண்டு வந்த தூதுச் செய்தி, அதவது குர்ஆன், அதில் முரண்பாடு உள்ளதா? குழப்பம் உள்ளதா? இன்றைய காலத்துக்குப் பொருந்தாத சட்டம் உள்ளதா? அது இறைவேதம் இல்லை என்று கூற உங்களிடம் உள்ள நியாயங்கள் என்ன? அதைக் கூறுங்கள் அதற்கு நாம் பதிலளிப்போம். இதுவே நியாயமான விமர்சனமாக இருக்க முடியும். இதை விடுத்து இல்லை மீண்டும் நான் அதையே பிடித்து நிற்பேன் என்ற ரீதியில் உங்களது மறுமொழி இருக்குமானால் நிச்சயமாக அவை அலட்சியம் செய்யப்படும்.

//அவங்கள பொறுத்த வரைக்கும் அவங்கதான் உண்மை கடவுளை கும்பிடுறாங்க மத்தவங்க எல்லாம் சாத்தான கும்பிடுறாங்க. பிற கடவுள கும்பிடுரவங்க எல்லாம் கேவலமான காபிர்கள். இதெல்லாம் அந்த திடீர் இறைத்தூதர் (வியாபாரி) சொன்னது.//

சகோதரரே! யாரைத் திருப்திப்படுத்த இப்படிக் கூறினீர்கள்? பைபிளின் பழய ஏற்பாடு கூறும் ஒரே கடவுளை வணங்காமல் மற்றவர்களை எவரேனும் வணங்கினால் அவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்று பைபிள் குறிப்பிடும் வரிகளை நீங்கள் கவனிக்கவில்லையா? இப்படிப்பட்ட விமர்சனத்தைக் கூறியதன் மூலம் உங்களின் முகத்திலேயே கரி வாரிப் பூசிக் கொண்டீர்களே?

அடுத்ததாக முந்தைய வேதங்களில் மனிதக் கரங்கள் விளையாடியதா என்பதற்கு விரிவான விளக்கங்கள் பதிவு செய்யப்படும். அதற்கு முன்னால் பினவரும் தொடுப்புகளை சற்று பார்வையிடுங்களேன்.

No comments: