அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, February 7, 2009

பெற்றோரே! உங்களத்தான்!

சகோதரர் ஜாஹிர் கருத்தில் உடன்பாடு கொண்டு இந்த கவிதை படைத்தேன்)
---------------------------------------------------------------------
ஐந்தில் வளையாதது ஐம்மதில் வளையாது என்ற ஐயம் காரணமா?
இல்லை அதிகம் சுமந்தால் தான் வருங்காலத்தின்
சுமைதாங்கியாய் குடும்பம் தாங்குவான்(ள்) என்ற தப்புக்கணக்கின்,
பயிற்சியின் முயற்சியா?
காலம் பாடம் சொல்லிக்கொடுக்கும் பெற்றோரே!
முதலில் நீங்கள் அவர்களை புரிய பழகுங்கள்.
பூவின் வாசம் நுகரத்தெரியாத நீங்கள் மலர் தோட்டம் வாங்கி -
அதை சுற்றி வசித்து என்ன பயன்?
பயிரை காக்கவேண்டிய நீங்களே-
வேரினில் வென்னீர் ஊற்றுவதா?
பாவம் அந்த இளம் தளிர்கள்!
போதிக்க வேண்டியது அவர்களுக்கள்ள உங்களுக்குத்தான்.
கரிசனத்தையும்,கவனிப்பையும் சரியா செய்தாலே போதும்,
காலம் அவர்களை சரியாய் செழுத்திவிடும்.
கண்டிப்பு அவசியம் தான் ஆனால் கல்லுறம் கொண்டல்ல,
கணிவுடன்,பக்குவத்துடன் செய்துபாருங்கள்
பின்பு பாருங்கள்..
அந்த பிஞ்சுகள் பக்குவமாய் கணிந்து நிற்பதை.
(சகோ.முஹம்மது தஸ்தகீர்)
--தபால் காரன்.

No comments: