அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, February 5, 2009

கிருஸ்தவர்களுக்கு பல்லாயிரம்கோடி கடவுள்களா? - PART - 03

அல்லாஹ்வின் சங்கைமிக்க திருத்தூதரான ஏசு என்ற நபி ஈஸா (அலை) அவர்களை கடவுள் என்று பொய்யுரைப்பதற்கு குர்ஆனையும் நபிமொழியையும் கையில் எடுத்ததால் உண்மையடியானுக்கு வந்த வினையைப் பார்த்தீர்களா? ஒரு கடவுளை உருவாக்கக் கனவுகண்ட இவருக்கு, பல பில்லியன், ட்ரில்லியன் கடவுள்கள் கிடைத்துள்ளன. இதை அறிந்து பெருமிதம் அடைந்தாலும் அடைவார் இந்த பொய்யடியான்.நபி ஈஸா (அலை) அவர்களைப் பற்றி வல்ல இறைவன் கூறுவதையும், கிருஸ்தவர்களுக்கு எதிரான நபி ஈஸா (அலை) அவர்களின் வாக்குமூலத்தையும், நபி (ஸல்) அவர்களைப் பற்றி முன்னறிவிப்பு செய்ததையும் விளக்கும் திருக்குர்ஆன் வசனங்களை உண்மையடியான் வகையறாக்கள் படித்து புத்தியுடன் நடந்து கொள்ளட்டும். இனியேனும் குர்ஆன் அப்படி சொல்கிறது, ஹதீஸ் இப்படி சொல்கிறது என்று எதைஎதையோ உளறிக் கொட்டிவிட்டு முஸ்லிம்லிம்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளாமல் இருப்பார்களாக.

No comments: