அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, February 6, 2009

திருப்புல்லாணி அருகே வாகன ஓட்டிகளை காவு கேட்கும் மங்கமா சாலை

பனைக்குளம்,பிப்.5-

திருப்புல்லாணி அருகே சேதமடைந்துள்ள மங் கமா சாலை அந்த வழி யாக வரும் வாகன ஓட்டி களை காவு கேட்கும் வித மாக உள்ளது.

மங்கமா சாலை

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மங் கமா சாலை திருப்புல்லாணி,பெரியபட்டினம்,ரெகுநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வங்க கடலில் உருவான புயல் காரணமாக பெய்த மழையில் தேங்கிய மழைநீரை அகற்ற துண்டித்து விட்டனர். ஆனால் அதன்பிறகு சீர மைக்க யாரும் முன்வர வில்லை.

இதனால் இரவு நேரங்க ளில் இந்த வழியாக செல் லும் வாகனங்கள் விபத்துக்குள் ளாகி வருகிறது. இதுகுறித்து எச்சரிக்கை பலகையும் இல் லாததால் 20க்கும் மேற்பட் டவர்கள் இதுவரை படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்புல்லாணி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற் றும் தலைமை காவலர் 2 பேரும் ரோந்து சென்றபோது சாலை துண்டிக்கப்பட்டது தெரியாமல் குழியில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.

விபத்துக்கள்

இதுகுறித்து அந்தபகுதியி னர் கூறியதாவது:- சில மாதங் களுக்கு முன்பு மழை வெள்ளம் விவசாய நிலங்களில் தேங்கி நின்றது. இந்த தண்ணீரை கடத்துவதற்காக சாலை துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனால் இந்த சாலை வழியாக வரும் புதிய நபர்கள் குழிக்குள் விழுந்து படுகாயம் அடைந்து வருகின் றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஆம்னி வேன் ஒன்று இந்த குழியில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் வந்தவர்கள் அதிர்ஷ்டவச மாக உயிர் தப்பினர். எனவே தொடர்ந்து காவு வாங்கிக் கொண்டிருக்கும் இந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

No comments: